India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன.29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் சாத்தப்பட்டது. மூலவர் சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட்டது. இன்று காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கண்டு தரிசிக்கலாம்.
அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து தங்கள் கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து ஜனவரி 30ஆம் தேதி வல்லாளப்பட்டி கிராமத்திற்கு மத்திய அமைச்சர் வர இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் 11 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு காணிக்கை நேற்று (ஜன.28) எண்ணப்பட்டது. உண்டியலில் ரொக்கம் ரூ.1 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 973 பணமும், 427 கிராம் தங்கம், வெள்ளி 995 கிராம் வெள்ளி மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 801 எண்ணம் வரப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரி தொடர்ந்த வழக்கை இன்று (ஜன.28) விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் திட்டம் அரசின் கொள்கை முடிவுடன் தொடர்பானது. இருப்பினும் வருங்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கும் போது ஒத்தக்கடையில் இருந்து மேலூருக்கு திட்டத்தை நீட்டிப்பது குறித்த மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பறை இசைக்கலைஞர் வேல்முருகன் என்ற வேலு ஆசான். கடந்த 25ஆம் தேதி அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதள பக்கத்தில், வேலு ஆசானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர் புகைப்படத்துடன் கூறிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து வேலு ஆசானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் மாநகராட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு எத்தனை டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு மதுரையில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக ஆர்.டி.ஐ-யில் தகவல் கிடைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டில் மட்டும் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர் மற்றும் 598 ரவுடிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ல் 503 கொலைகள் நடந்த நிலையில், 2023ல் 477ஆக குறைந்தது. 2024ல் 449 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 238 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க மதுரை கூடுதல் கமிஷனர் உமாதேவி பரிந்துரைத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 94 நிறுவனங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 59 நிறுவனங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 35 நிறுவனங்களும், ராமநாதபுரத்தில் 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.உங்க நிறுவனத்தில் லீவ் விடப்பட்டது என்பதை கமெண்ட் பண்ணுங்க
மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 80 லட்சத்து 97 ஆயிரத்து 657 பணமும், தங்கம் 54 கிராம், வெள்ளி 465 கிராம், வெளி நாட்டு பணங்கள் 376ம் கிடைத்துள்ளது.உண்டியல் திறப்பின் போது, இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று(ஜன.27) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.