India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
15 ஆண்டுகளாக இல்லாத உச்சத்தை கார்ப்பரேட் லாபங்கள் எட்டியிருக்கும் நிலையில், அவர்களுக்கு வரி உயர்வு கொடுக்கப்படாதது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பீகார் மாநிலத்திற்கு மட்டும் ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் செல்லூர் ராஜூ இன்று பேட்டியளித்தார். அதில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரும் வரை 9 மாதம் திமுக அரசு தூங்கியது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டனுக்கு எதிராக குரல் எழுப்பி பேசினார். ஆனால் வெற்றி வெற்றி என்று வடிவேல் சொல்வது போல மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதுபோக மத்திய சுரங்கத் துறை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாமலை நாடகம் நடத்துகிறார். இதற்கு முழுமையான காரணம் அதிமுக தான் என்றார்.
மதுரை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 7598022923 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <
கொட்டாம்பட்டியை சேர்ந்த சாந்தி (40) என்பவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியைச் சேர்ந்த அமிர்தவல்லி, ஜெயலலிதா என்பவர்களின் ஆடுகள் மேய்ந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட சாந்தியை, அமிர்தவல்லியும் ஜெயலலிதாவும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொட்டாம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிணை செய்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சிக்கு முதல் பெண் கமிஷனராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியில் 2024 பிப்., 2ல் பொறுப்பேற்ற கமிஷனர் தினேஷ்குமார் தற்போது கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழக மின்ஆளுமை துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் 2019 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. திருச்சி, தர்மபுரியில் சப் கலெக்டராக இருந்தார்.
திருமங்கலம் – ராஜபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது.இதில் பகுதியில் சேடப்பட்டி பிரிவில் மேம்பாலம் அமைகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா சீனியர் சிபிஎஸ்சி பள்ளியில் பிப்.2ல் மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளங்கலை, முதுகலை B.ed, M.ed, M.phil, BE, ME, B.Tech, M.Tech முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன.31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், மதுரை மாநகர் தெற்கு, வடக்கு, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக விஷால் கிருஷ்ணா, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக தங்கப்பாண்டி, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக விஜய் அன்பன் கல்லாணை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர், சில மாதங்களுக்கு முன்பு, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு தொடர்ந்தார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் கவிதாவிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. நேற்று கவிதாவிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது சார்பாய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.