Madurai

News February 5, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம் – சு.வெ பதிவு

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைத்தத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம்  தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 90களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்போது எச்.ராஜா, அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்துள்ளனர்.

News February 5, 2025

சோழவந்தான் கிரில் சிக்கன் கடைக்கு ரூ.4,000 அபராதம் 

image

சோழவந்தான் காவல்துறை கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையிலிருந்த 9 மாதிரிகளை எடுத்து அரசு லேபில் ஆய்வு செய்ய அனுப்பி வைத்திருக்கின்றனர். உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் கடையில் பராமரிப்பு இன்றி வைத்ததற்காக ரூ.2,000 நெகிழிப்பை பயன்படுத்தியதாக 2 ஆயிரம் என என 4 ஆயிரம் அபராதம் விதித்து சிக்கன் கொடுத்த ஆகாஷ் சிக்கன் என்ற இறைச்சிக் கடைக்கு நோட்டீஸும் வழங்கினர்.

News February 5, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம் – ஆட்சிர் அறிக்கை

image

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிராம பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், வெளியூரை சேர்ந்த இரு தரப்பினரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், மத நல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 20 பேர் பாதிப்பு

image

மதுரை சோழவந்தான் பிரசன்னா என்ற இளைஞர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து ஒரு உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 5, 2025

திருமங்கலத்தில் போராடிய விவசாய சங்கத்தினர் கைது

image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று (பிப்.05) ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு பட்டியல் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும், MSP குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பு இல்லாததை கண்டித்தும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News February 5, 2025

திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு தடை இல்லை

image

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு மலை மீது பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால் கட்சியாகவோ, இயக்கமாகவோ அல்லது போராட்டம் செய்வதற்காகவோ செல்வதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

News February 5, 2025

மதுரையில் வெளியாகும் விடாமுயற்சி

image

நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான `விடாமுயற்சி` நாளை(பிப்.6) வெளியாக உள்ளது. இதற்கு மதுரைரசிகர் மிகவும் ஆர்வத்துடன் உள்ள நிலையில் படத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். அதில் வெற்றி, கோபுரம், தங்கரீகல், தமிழ்ஜெயா, ஜாஸ், அம்பீகா, சினிப்ரீயா, சோலைமலை, குரு, ரேடியன்ஸ், அண்ணாமலை, கணேஷ், பழனி ஆறுமுகா, சக்தி, சண்முகா உள்ளிட்ட திரையரங்கில் வெளியாகிறது.

News February 5, 2025

திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்கு

image

மதுரையில் பிப்.3,4 ஆகிய இரண்டு நாட்கள் 144 தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 144 தடையை மீறி திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த 87 பேரும், ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர், திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சஷ்டி மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரர் என 195 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 5, 2025

மதுரையில் 910 ஹெக்டேர் நெற்பயிர் பாதிப்பு

image

மதுரையில் அக்டோபரில் பெய்த மழை, அடுத்து வந்த தட்பவெப்பநிலை மாறுபாட்டால் 910 எக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மதுரை கிழக்கில் 298 எக்டேர், மேற்கு 123, மேலுார் 20, வாடிப்பட்டி 93, திருப்பரங்குன்றம் 81, அலங்காநல்லுார் 57, கள்ளிக்குடி 132, டி.கல்லுப்பட்டியில் 93 எக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணைஇயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!