India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தண்டபாணி சன்னதியின் முன்புறமுள்ள ஒரு மண்டபத்தூணில் விநாயகத்தாரணி எனப்படும் பெண் விநாயகியைக் காணலாம். இவர் யானை முகம் கொண்டு மார்பகங்களுடன் வளைந்து நெளிந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு பாவாடை அணிவிப்பார்கள். இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு திருமணத்தடை களத்திர தோஷம் மற்றும் பல தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. Share It..
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மக்கள் சண்டையிடாவிட்டாலும், நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் எனக் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பரத் மகள் இசக்கி ஈஸ்வரி(20). நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இசக்கி ஈஸ்வரி மன உளைச்சலில் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளைச் செயலாளர் தியாகராஜன் சில தினங்களுக்கு முன் போலீசாரிடம் மனு அளித்தார்.இதில் நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதால் துண்டு பிரசுரங்கள் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதியை மீறி நேற்று துண்டு பிரசுரம் வழங்கியதாக 30 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மாநகராட்சியுடன் நரசிங்கம், ஏற்குடி, அச்சம்பத்து ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிரான வழக்கில், அரசிடம் ஆட்சேபனை மனு அளித்து நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் அரசாணை வெளியிடப்பட்டதாகவும் அரசாணை அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி நரசிங்கம் சசி குமாரின்மனு மீதான விசாரணையில், கவர்னரின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு பதில்.
உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியின் 2 மகன்கள் வெளியூரில் உள்ளனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கராமன்(30), என்பவர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை அளித்த தங்கராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம். மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகம், குதிரை படை காவலர் குடியிருப்பு வளாகம், பாரதி ஸ்டோர் எதிரில், விஸ்வநாதபுரம் மதுரை-14 என்ற முகவரியில் நேரில் வரலாம் என மதுரை மாநகர காவல் துறை தரப்பில் தகவல்.*ஷேர்
மதுரை மாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் பொது மக்களுக்கு மாநகர காவல் துறை தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் போது அவற்றில் விலை உயர்ந்த பொருட்களை வைத்து விட்டு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் குடியிருப்பு பகுதியில் CCTV பொருத்தும்படி காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது. குறிப்பாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் CCTV கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்வோம். நம்மை சுற்றியுள்ளவர்களையும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர உறு துணையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கருடைய வெண்கலச் சிலையை அமைக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.