India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா பிப். 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடைபெற உள்ளது. இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26ம் தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம் கோவில் நிர்வாக அறிவிப்பு. பகிரவும்
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர் உசிலம்பட்டி சோழவந்தான் திருமங்கலம் பகுதியில் இன்று( 20.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் தொடர்பான விவரங்களை மதுரை மாவட்ட காவல்துறையை வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை(பிப்.21)நடைபெறுகிறது. இதில், 30க்கும் அதிகமான தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களை தோ்வு செய்கின்றனா். முகாமில் பங்கேற்பவா்கள் தங்கள் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என மதுரை ஆட்சியர் தகவல்.
மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் லாரிகள் மூலம் நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் பாதுகாப்பாக வைக்காமல் திறந்த வெளியில் நீண்ட நாளாக பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நெல் விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க 9445257000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். *ஷேர்
மதுரை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது அம்பிகா, மூகாம்பிகா தியேட்டர்கள். பிரபலமான சோலைமலை குழுமத்தால் இயக்கப்படும் இந்த தியேட்டரில் அனைத்து முன்னணி நடிகர்களும் திரையிடப்பட்டு வந்த நிலையில், அடுத்த வாரத்துடன் தியேட்டர்கள் மூடப்பட இருப்பதாக அதன் உரிமையாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தியேட்டரை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை(பிப்.21) காலை 10:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்கலாம். எனவே மாவட்டத்தில் அனைத்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். *ஷேர்
மதுரை, அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார்(54). இவர் கடந்த 2021ம் ஆண்டு தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கு நேற்று மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. குற்றவாளி அய்யனாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் தீர்ப்பளித்தார்.
மதுரை மாநகர காவல் ஆணையகத்தில் உள்ள 02 கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் ஏலமிட திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 27.02.2025 அன்று காலை மதுரை மாநகர் ஆயுதப்படையில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க உள்ளவர்கள் 2000 ரூபாய் முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ்சிங்கில் உள்ள மதுரை கோட்ட அலுவலகத்தில் நாளை (பிப்.20) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், யானைக்கல், டவுன் ஹால், சிந்தாமணி, அனுப்பனடி பகுதிகளைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களின் குறைகளை நேரிலோ மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட காவல் சரகங்களில் இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.