India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (பிப்.26) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். சிறப்பான தரிசனம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என்று கூறினார். மேலும் இ.வி.எம் இயந்திரம், தொகுதி மறுவரையரை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றார்.
மதுரையில் பாரம்பரியம் என்று எடுத்துக்கொண்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான். ஆகையால் அந்த கோயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன் அடிப்படையில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தைத் துளையிட்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதால், எந்த ஆபத்துக்கும் வாய்ப்பில்லை என தகவல்
மதுரை மாநகர மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 32 கி.மீ. தூரத்தில் 26 ரயில் நிறுத்தங்களைக் கொண்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையோடு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் வழங்க இருப்பதாக திட்ட இயக்குனர் கூறியுள்ளார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுப்பானடி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள (100 வார்டு பகுதிகளில்) பொதுமக்கள் தெருவிளக்கு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் 7871661787 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை தனியார் தங்கும் விடுதி மேலாளரான தர்மராஜன் என்பவர் 7.7.2022 அன்று விடுதியில் தூங்கி கொண்டிருந்த போது கைப்பேசி சாா்ஜரால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த சங்கிலி மோதிரத்தை திருடிய வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்தாகாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன்தாகாவுக்கு ஆயுள் சிறை, ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி கே. ஜேசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
மதுரை மெட்ரோ திட்டம் குறித்து மேலாண்மை இயக்குனர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறியது; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11,368 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையின் பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வண்ணம் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது என்றார்.
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; “பொருத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது. நடவடிக்கை வேண்டும் என்றார்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மதுரையில் 10 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும்.<
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு மதுரை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.