India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் ஆத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் மகேந்திரன்(20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் டூவீலரில் ஆண்டிபட்டி பங்களாவிலிருந்து வாடிப்பட்டி சென்ற போது சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலால் தடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சமயநல்லூரை சேர்ந்த புஷ்பவனம் மனைவி தேவிஸ்ரீ (19), மதுரையில் உள்ள கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர் வீட்டில் தனியாக இருந்த போது நேற்று (ஏப்.08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 0452-2531395 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் G.R சாமிநாதன் அளித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு உத்தரவு. இது சிறிய பிரச்னை அல்ல, மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, அவசரம் காட்ட முடியாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக கருத வேண்டாம் எனவும் கருத்து. வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

மதுரை தேத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடுகுமுனியசாமி (23) மற்றும் அவரது நண்பர் மோகன் (25) இருவரும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காரில் வந்த மர்ம்கும்பல், இருவரையும் நடுரோட்டில் ஓட ஓட கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு, காரில் தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய காரின் அடையாளங்களைச் சேகரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

மதுரை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.