India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜன.06) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். இதில் அமைச்சர் மூர்த்தி, கட்சியின் உயர்நிலை தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்தில் வரவேற்று, உற்சாக வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சிகளில் நாளை கலந்து கொள்ள உள்ளார்.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து மதுரை வருகை தந்து, தனியார் விடுதியில் ஓய்வெடுக்கிறார். நாளை திண்டுக்கல்லில் அரசு விழாவில் கலந்து கொண்டு, பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக சென்னைக்கு புறப்படுகிறார். இதனை முன்னிட்டு, மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் தகுதியான ரேஷன் அட்டை தாரர்களின் எண்ணிக்கை: 9,46,728. இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2,840,184,000 (284 கோடியே 1 இலட்சத்து 84 ஆயிரம்) தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. *ஷேர்

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

மதுரை மக்களே <

வாடிப்பட்டி திருவேடகத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கார்த்தியோகன்(23). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பெற்றோருடன் வசித்தவர் தொடர்ந்து மது அருந்தியதை அவர்கள் கண்டிக்கவே, அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இவர் மீண்டும் மது அருந்த, நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.