India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மதுரை போடிநாயக்கனூர் வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்து நகர், கன்னியாகுமரி, அனந்தபுரி ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா கோச்சில் பயணிப்பதற்கான டிக்கெட்களை போடிநாயக்கனூர், தேனி ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வரிச்சியூர் அருகே ஆசிரியர் சுபஶ்ரீ உருவாக்கி இருக்கும் மூலிகைப் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஆசிரியை சுபஶ்ரீயின் மூலிகைப் பூங்காவை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருப்பதாக பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
கொட்டாம்பட்டியில் இருந்து நேற்று மதுரை நோக்கி 2 கார்கள் வந்துள்ளன. இந்த கார்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 2 கார்களும் எதிர் திசையில் உள்ள சாலைக்கு சென்றன. அப்போது எதிர் திசையில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது ஒரு கார் பயங்கரமாக மோதியது. மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐசக்டேனியல்(20). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 5 மாத கர்ப்பமானார். இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் ஐசக்டேனியல் மீது போக்ஸோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் வீரய்யா மகள் முருகேஸ்வரி(18). உத்தங்குடி அல்ட்ரா கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் தனது தோழிகளுடன் இன்று வெள்ளரிபட்டியில் உள்ள பி. குளத்து கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.
மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு ரூ.20 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. மதுரை எஸ் எஸ் காலனியில் கடந்த 2019ல் கொள்ளை வழக்கில் கைதான 17வயது சிறுவன் போலீஸ் விசாரணையில் அடித்ததில் உயிரிழந்த வழக்கில் அவரது தாய் நிவாரணம் கோரி தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
மதுரை அழகர் கோவில் ஆட்டோ டிரைவர் தயாளன் இவரது மனைவி மீனாட்சி 33. இவர் வீட்டருகே தல்லாகுளம் தனிப்படை போலீஸ் ஏட்டு செல்வராஜுடன் மீனாட்சிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசில் தயாளன் புகார் அளித்தார். ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு உள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன் கமிஷனர் லோகநாதரிடம் புகார் அளித்தார். இதனால் ஏட்டு செல்வராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக மதுரை அருகிலுள்ள அகழ்வாராய்ச்சி தளமான கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினமான இன்று நியூ டெல்லி விஞ்ஞான பவனில் நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார் கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன்.
Sorry, no posts matched your criteria.