India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை இன்று மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அவதரிக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் குறித்தும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பொது கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் (சிறுநீர் கழிப்பதற்கு ரூ.2. மலம் கழிப்பதற்கு ரூ.5. குளிப்பதற்கு ரூ.10) விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மதுரை மாநகராட்சி புகார் மையம் எண் 78716 61787 என்ற எண்ணிற்கு தொலை பேசி (அல்லது) வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையதுறைக்குட்பட்ட கோயில்களில் உள்ள மருத்துவ குணம் கொண்ட செடிகள், மரங்கள் உள்ள நந்தவனங்களை இரும்புவேலி அமைத்து பாதுகாக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நந்தவனத்திற்கு போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி கோயிலுக்கு தேவையான பூக்களை அங்கிருந்தே பறித்து பயன்படுத்த உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா வருகின்ற 3 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் கொலுச் சாவடியில் அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழா நாட்களில் தினசரி ஆன்மீக சொற்பொழிவு இசைக் கச்சேரிகள் நடைபெறும்.
மதுரை மாவட்டம் நரிமேட்டில் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளி ஜெய நகரில் இயங்கும் ஜீவனா பள்ளி மதுரை ராமேஸ்வரம் சாலையில் இயங்கும் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி உட்பட 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு விரட்டல் வந்துள்ளது இதை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்த முருகன் 34, மனைவி ஜோதிகா 25. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது ஜோதிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஜோதிகா, மணிகண்டன் என்பவரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவில் மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதைக்கண்ட கணவர் முருகன் ஆத்திரமடைந்து மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
மதுரை முனியப்பன் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி ஜோதி, 42. இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். தனது மகனுடன் தனியாக வசித்து வந்த ஜோதிக்கு தகாத உறவால் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை கமுதியைச் சேர்ந்த வீரணன்-அபிநயா தம்பதிக்கு ரூ.10,000 விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் இன்று ஜோதிஜோதி, ராஜேஷ், அபிநயா ஆகிய மூவரை கைது செய்தனர்.
மதுரை சிந்தாமணி பகுதியில் நேற்று காலை 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த பை, ஆட்டோ, லோடு வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்ட சக்திவேல் (26), உமா மகேஸ்வரன் (18) மற்றும் 3 சிறார்கள் என 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கத்திகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுரை – சிலைமான் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக மதுரையிலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் ரயில் (06651), அக்டோபர் 3 ஆம் தேதி காலை 08.05 மணிக்கும் (75 நிமிடங்கள் காலதாமதம்), அக்டோபர் 4 அன்று காலை 08.10 மணிக்கும் (80 நிமிடங்கள் காலதாமதம்) புறப்படும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை பழைய குயவர்பாளையம் சாலையில் இயங்கும் பிரபல இடியாப்பக்கடை ஒன்றில் பாரம்பரியயத்தை பாதுகாக்கும் வகையில் தேங்காய் சிரட்டையில் சிறுதானிய புட்டு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பழமை மாறாமல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிரட்டை சிறுதானிய புட்டு தயாரிப்பு மதுரையில் ட்ரெண்டாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.