India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட காவல் துறையில் பயன் படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஆறு, நான்கு, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வரும் 5.10.2024 காலை 10.00 மணிக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. ஏலம் நடைபெறும் நாள் காலை 8 மணி முதல் 10.00 மணிக்குள் தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள எஸ்பி அரவிந்த் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது டெல்டா மாவட்டத்தில் அரிசி சாகுபடி குறைந்து வருகிறது. பொன்னி போன்ற ரகங்கள் தற்போது பயிரிடுவதே இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது என நீதிபதிகள் தெரித்தனர்.
தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01928) மதுரையிலிருந்து அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 01, 08 15, 22, 29, டிசம்பர் 06, 13, 20, 27, ஜனவரி 03 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அமரன் பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு தனக்கு ஆண் தன்மைதான் அதிகம் இருப்பதை உணர்ந்த அவர் அந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2021இல் முழுமையாக ஆண் தோற்றத்திற்கு மாறியுள்ளார். வீட்டில் அதற்கு மேல் அவரை ஏற்பார்களா என்பதில் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தற்போது மதுரை மாநகரில் ஆட்டோ ஓட்டி தன் வாழ்வை கடந்து வருகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 11 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்களின் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் திறப்பின்போது ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165 ரொக்க பணமும், 455 கிராம் தங்கம், 649 கிராம் வெள்ளி பொருட்களும் 398 அயல் நாட்டு நோட்டுக்களும் காணிக்கையாக பெறப்பட்டன.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் மற்றும் நீக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளனர். வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததால் அவர் மீது கோபத்தில் இருந்த பாஜகவிற்கு அடிபணிந்து மனோ தங்கராஜை அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரை கோட்டத்தில் 11 ரயில் நிலையங்களில் உள்ள 151 பயணச்சீட்டு விற்பனை சாளரங்களில் பணப் பரிவர்த்தனைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் க்யூ ஆர் கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத மொத்த வருமானத்தில் 1.76 சதவீதம் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றிருந்தது. இது செப்டம்பர் மாத கடைசியில் 5.70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை அருகே அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் இன்று (செப்.30) மாலை திரைப்பட நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. நடிகை ரோஜாவை காண சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பலர் முண்டியடித்து வந்து, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தரிசனம் முடிந்து அவர் கிளம்பி சென்றார்.
பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வாய்சொல்லில் வீரராக இல்லாமல், கோயிலுக்கு உண்மையான சேவை செய்யத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம்
எந்த யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்தாரோ? அதே யூடியூப் சேனலில் வருத்தம் தெரிவித்து பேட்டி கொடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடம்பூர் சார்பதிவாளர் பார்வதி நாதனுக்கு, ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி கடம்பூரை சேர்ந்த பாண்டியின் பத்திரப்பதிவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பத்திர பதிவு செய்து கொடுக்க உத்தரவு.
Sorry, no posts matched your criteria.