India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக ஊடகங்களில் போலி ID மூலம் வதந்திகள், தனி நபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கள் பெயரில் உள்ள சமூக ஊடக கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என சமூக வலை தளங்களுக்கு உத்தரவிட வேண்டும். நாதக ஆதரவாளர்களின் அவதூறு பதிவுகளை நீக்கக்கோரி திருச்சி எஸ்.பி. வருண்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு வாதம் முன் வைத்தனர்.
ஒன்றிய அரசின் “தேசிய நல்லாசிரியர் விருது” பெற்ற மதுரை, இலட்சுமிபுரம், டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 திரு. இரா.சே.முரளிதரன் அவர்கள் குடும்பத்தினருடன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
100 நாள் வேலை திட்டத்தை ஊராட்சித் தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்துவதாகவும் மகாத்மா காந்தி பெயரை வைத்துக் கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் அரவக்குறிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக தாக்கல் செய்த மனுவில் கரூர் மாவட்ட ஆட்சியர், ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நான்கு மாதத்திற்கு பின் புதிய முதல்வராக மதுரை அரசு மருத்துவமனையில் ENT மருத்துவராக பணியாற்றிய அருள் சுந்தரேஷ் குமார் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் இன்று (அக்.4) பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக மதுரை ஆதீனம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வைகை நதியை சீரமைக்க பணி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு 3 பேர் நேரில் வந்ததாகவும், வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி, அதை உங்களால் எப்படி செய்ய முடியும்
என கூறி பணம் தர மறுத்ததால் தன்னை தரக்குறைவாக பேசியதாக ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவு முடிந்த அதே நாளில் பத்திரங்களை வழங்க வேண்டும்’ என, சார்பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்களின் நிலவரம், அதற்கான காரணம் குறித்து மேலதிகாரிகளுக்கு சார்பதிவாளர்கள் தகவல் அளிக்க வேண்டும்’ எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார துறையில் லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானைக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்த ஆய்வக நுட்பணர்களை நியமனம் செய்த பின்பு கிரேட்-3 பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை செல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோயிலில் நவராத்திரி விழா இன்று வெகு விமர்சையாக துவங்கியுள்ளது. முதல் நாள் விழாவில் அன்னை குரவங்கமழ் குழலம்மை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார துறையில் லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானைக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்த ஆய்வக நுட்பணர்களை நியமனம் செய்த பின்பு கிரேட்-3 பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.