India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, (13.01.2026) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மாற்றுச்சாலை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உசிலம்பட்டி பூதிப்புரத்தை சேர்ந்தவர் மதன்குமார்(18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. இதில் கிரிக்கெட் மட்டையால், மதன் குமார் தலை, உடல் என சரமாரியாக தாக்கப்பட்டார். உசிலம்பட்டி போலீசார் அஜித்குமார்(24), புலிப்பாண்டி(23), டார்வின்(19), ஹரி(21), கல்யாணி(23), விக்னேஷ்(27), கார்த்திக்(25) என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகின்ற 15.1.2026 தேதி அன்று மதுரை மாநகர் அவனியாபுரம் – தி.குன்றம் சாலையில் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் செல்லும், அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ் – வெள்ளக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (13.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட மெய்நிகர் ஆய்வகத்தை (virtual Lab) மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், MLA பூமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் பங்கேற்றனர். *ஷேர் பண்ணுங்க.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

மதுரை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

மதுரை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
Sorry, no posts matched your criteria.