India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜல்லிகட்டு, மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி மறுக்கும் அதிகாரம் காவல் துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என மேலூர் அருகே முசுண்டகிரிபட்டி கிராமத்தில் அக்.13 அன்று மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட கோரிய மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து 2 இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகளுடன் கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06193) அக்டோபர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.10) மாலை 4.30 மணிக்கு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் பொதுமக்கள் நாளை நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களை குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் நவம்பர் 2 முதல் 14 வரை கந்த சஷ்டி விழா நடைபெறவுள்ளது. மேலும், ஐப்பசி பூரம் வரும் அக்.28ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன், உற்சவர் அம்பாளுடன் ஏத்தி இறக்குதல் நடைபெறுகிறது.
தீபாவளி திருநாளான அக்.31ம் தேதி காலை 6 மணி, மாலை 6.30 மணிக்கு, அம்மனுக்கு வைரத்திலான கிரீடம், தங்கத்திலான கவசம் சாத்தப்படுகிறது.
மதுரை “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை” என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மதுரைமாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் நடத்திய போதை தடுப்பு குறித்த ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 24,175 கடைகளுக்கு ரூ. 1.19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், அனுப்பானடி பகுதியில் வீடுகளில் புகையிலை பொருட்களை ஹாட்பாக்ஸ்-ல் வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரவன் என்ற குட்ட அஜித் நேற்று செல்லூர் எல்ஐசி பாலம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை இன்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஓராண்டிற்கு முன் கதிரவன் தன்னை தாக்கி மூக்கை உடைத்ததாகவும் அதன் காரணமாக அவரை பழிக்கு பலியாக கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இறுதி சாட்சியாக சிபிஐ விசாரணை அதிகாரியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா வரும் 16ஆம் தேதி ஆஜராகிறார். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன்னிலையில் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7806847823, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையின் முக்கிய கடை வீதிகள் நேற்று மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி வாங்க செல்வதால் ஜவுளிக்கடைகள் நிறைந்த பிரபல துணிக் கடைகள் அமைந்துள்ள கீழவாசல், விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, உள்ளிட்ட வீதிகளில் கட்டுக்கடங்கா மக்கள் கூட்டம் காணப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.