India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2020 – 2024 ஜூன் வரை 18 வயது நிரம்பாத 2,123 சிறுமிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது, அதில் 1835 குழந்தைகள் உயிருடனும் 288 குழந்தைகள் இருந்தும் பிறந்துள்ளது, பிரசவத்தின் போது 18 வயது நிரம்பாத மூன்று தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் படி வெளிச்சத்துக்கு வந்துள்ளது
மதுரையில் நேற்று 5வது முறையாக புதுார் அல்அமின் நகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளி, வீரபாஞ்சானில் உள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து ஹேக்கர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
பேரையூர் தேவன்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன். தேனி உத்தமபாளையத்திற்கு அக்.8 இல் டூவிலரில் கண்ணன் சென்ற போது தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்.10ம் தேதி கண்ணன் மூலைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் மதுரை, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
தென்னக ரயில்வே மதுரை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூரிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் அன்று மாலை 4.00 மணிக்கு “INTERSTELLAR” என்ற திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நூலக நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி (17) என்ற மாணவி இன்று காலை பள்ளிக்கு வந்த நிலையில், வளாகத்தில் வைத்து மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் கொண்டு செல்ல, மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 88 விற்பனையாளர் மற்றும் 18 பணியிடங்கள் மதுரை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, கட்டுநருக்கு 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையதளம் முகவரியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ், பழனியில் உள்ள, 14வது பட்டாலியன் தமிழக சிறப்பு படை காவலராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கொன்றில் கைதான சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிவாவிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் கஞ்சா வாங்கி வர சொன்னது பிரகாஷ் தான் என்று தெரிய வந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முன்தினம் பிரகாஷை கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் கரைகளை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் (வ.ஊ/கி.ஊ) தங்கள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்களில் கிராம பொதுமக்கள், ஆர்வமுள்ள கிராம இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரநிதிகள் மற்றும் மாணவர்களை பயன்படுத்தி பனைமர விதை நடுதல் நிகழ்ச்சியினை திறம்பட நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் சோனு பிரபாகரன். உணவக ஊழியரான இவரது மனைவி சாந்திக்கும், சாந்தியின் அக்கா கணவர் பிரபுவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த சோனு பிரபாகரன் இன்று பிரபுவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் சோனு பிரபாகரனை பிரபு திருப்பிளியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.