India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விளக்குத்தூண் பகுதியில் ஒரே கடையில் மட்டும் 10 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் தெற்கு வாசலில் உள்ள கடை ஒன்றில் ஒரு கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ல் துவங்கி நவம்பர் 8ல் நிறைவடைகிறது. கோயிலில் நவம்பர் 2, காலையில் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் வள்ளி, ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு காப்பு கட்டப்படும். அதனைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 6ல் வேல் வாங்குதல், நவம்பர் 7ல் சூரசம்ஹாரம், நவம்பர் 8 காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த மின்வாரிய அலுவலர் சேகர் என்பவர் மகன் சண்முக பாலன் 19. மதுரை அரசு வேளாண் கல்லூரியில் பயின்று வரும் சண்முக பாலன் நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை மீட்ட போலீசார் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து சக மாணவர்கள் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரப்பாளையம் கருடர் பாலம் பகுதியில் நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக நீர் முழுமையாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
தென்னக ரெயில்வே சார்பில் விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து மதுரை வழியாக செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து இன்று(அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
மதுரையில் நேற்று(அக்.12)இரவு சுமார் 3 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காகு, மூக்கு, தொண்டைப் பிரிவில் 11.10.2024 அன்று விடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் லெ. அருள் சுந்தரேஷ்குமார் MS(ENT) அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையகுழுவின் உறுப்பினர் பேராசிரியர் மருத்துவர் கே.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மதுரையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே போதை புழக்கத்தை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நான் என் மீது கொண்ட அதீத பற்றால் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க இந்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதனர்.
நேற்று முன்தினம் 27 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.