India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஆவின் தீபாவளி இனிப்பு வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை டைபெற்று வருகிறது. ஆவின் பொது மேலாளர் சிவகாமி கூறும் போது ஆவினில் பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் ரூ.300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெய் பாதுஷா. முந்திரி அல்வா அடங்கிய காம்போ பேக் ரூ.900 க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது. ஆவின் ஸ்பெஷல் காம்போ பேக் பற்றிய விளம்பரங்களும் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன என்றார்.
தென்னை மரங்களுக்கு அக். 31க்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமென தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 17 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது.இயற்கை மற்றும் பிற ஆபத்துகளுக்கு எதிராக தென்னை மரத்திற்கு வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 31 கடைசிநாள் என்பதால் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம் என்றார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரத்தில் முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்த தொகைக்கான ஆதாரத்துடன், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை நேரில் அணுகலாம் எனவும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அரசு நடவடிக்கை தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டதால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மோதகம் அருகே ராஜபாளையம் to மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை மதுரை நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் பயணம் செய்த கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கையில் இந்தியாவின் 27 மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றும் போது தமிழ்நாடு மட்டும் பின்பற்றவில்லை என்று ஆளுநர் ஆதங்கப்படுகிறார். இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் எனவும், இன்னொரு தனித்துவமும் உண்டு, இதுவரையிலான 25 ஆளுநர்கள் போல் அல்லாமல் நீங்கள் மட்டும் சட்டத்தையும், தமிழ்நாட்டின் மாண்பையும் மதிக்கத்தவறுவதை சகித்துக்கொண்டிருப்பது என விமர்சனம் செய்துள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது புதிய பாம்பன் பாலம் தயார் நிலையில் உள்ளது. இதில் சமீபத்தில் கூட ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நவம்பர் 1 முதல் திருவனந்தபுரம் – மதுரை அம்ரிதா ரயில் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெரிகிறது.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மதுரை உள்ளிட்ட சில சிறைகளில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சந்திக்க ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்யும் வசதி உள்ளது. 3 நாட்களுக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் கைதி பேசலாம். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகத்தால் பதிவு செய்யப்படும். சிறை காவலர்களும் கண்காணிப்பர் மாவட்ட சிறைகளிலும் இவ்வசதி அமைக்கப்படுகிறது.
மதுரை ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சில குடும்பத்தினர், கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அக்டோபர் 17ஆம் தேதி வியாழன் அன்று கோயில் திருவிழா முடிந்ததும், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெரியசாமிபுரம் அருகே உள்ள கடலோரப் பகுதிக்கு நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி இரண்டு பெண்கள் இறந்தனர். மேலும் மூன்று பெண்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.