India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் 1ரூ.1,186 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் கடந்த மாதம் வரை 60.74% மீதமுள்ளது கடனாக வழங்க திட்டம், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதம் அரசு மானியத்துடன் சுயதொழில், மகளிர் கடன் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அன்னை மீனாட்சி கோலாட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6 ஆம் நாளான இன்று (07.11.2024) மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனை பூஜை நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டனர்.
மதுரையில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (07.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அவசர உதவிக்கு இந்த தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஓரினச்சேர்க்கை செயலி (Grindr app) மூலம் ஆண் நண்பர்களுடன் சாட் செய்து அவர்களை தனி இடத்திற்கு வரச் சொல்லி தாக்கி பணம், மொபைல் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மகேந்திரன், அருண் குமார் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஹரி கிருஷ்ணனுக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் மற்ற இருவருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் 09.11.2024 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை மனுவாக அளித்து நிவர்த்தி செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் வருகை மற்றும் அவரின் அறிவிப்புகள் திமுக கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏற்படுத்தாது என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கட்சிகள் பதவிக்காக ஓடி வருவார்கள் என்பது போல் உள்ளதாகவும், அது இழிவுப்படுத்துவதை போல உள்ளதாக மக்கள் நினைப்பார்கள் என்றார்.
மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்கிய வகையில் கடந்த நவ.4ம் தேதி அன்று போக்குவரத்து கழக மண்டலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக பட்ச வருவாயாக ரூ.3 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரம் ஈட்டி உள்ளது. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ.,சுற்றளவில் 9 மீ.,உயரத்திற்கு மேல் கோபுரங்களை மறைக்கும் வகையில் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது,’ என மாநகராட்சி தரப்பில் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. எனவே கட்டிட உயர கட்டுப்பாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை, நிறுவன செயலாளர்-இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.