India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤வியுகம்-2024 ஏழு நாள் சிறப்பு முகாம், காலை முதல், சமூக அறிவியல் கல்லூரி
➤ இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி, ஒட்டல் வெஸ்டர்ன் பார்க், காலை 9.30 மணி,
➤பேச்செனும் பெருந்தெய்வம் கருத்தரங்கு, கலைஞர் நூலகம், மாலை 5 மணி
➤தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, உலக தமிழ்ச்சங்கம், காலை 10.30 மணி
➤மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி அலுவலகம், காலை 10.15 மணி
தீபாவளி பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை வருவதால் 28.10.2024 முதல் 30.10.2024 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 355 பேருந்துகளும், தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 02.11.2024 முதல் 04.11.2024 வரை சென்னைக்கு 280 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் மாதாந்திர மாமன்ற கூட்டம் அண்ணா அறிஞர் மாளிகையில் நடைபெறுவது வழக்கம் இன்று(அக்.24) இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என மேயர் இந்திராணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்மேலும் நூறு மாமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடியதாகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்பதால் பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
மதுரை பந்தல்குடி கால்வாயில் குப்பைகளை அகற்றுவதற்காக கால்வாய்க்குள் இறங்கிய கோரிப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். சுமார் 3 மணி நேரமாக அவரை தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் பந்தல்குடி பாலம் பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது, அப்படி இல்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு உத்தரவு.வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவு
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் பந்தல்குடி கால்வாயில் குப்பைகள் கிடந்ததால் அதனை அகற்றுவதற்காக கால்வாய்க்குள் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீர் வேகம் அதிகரித்து அவர் திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். பந்தல்குடி கால்வாய் பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்ட பாண்டியராஜனை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
27.10.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும் அக்.29 & 30 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2014 (மாலை 07.00 மணி வரை மட்டும்) மற்றும் 29.10.2024, 30.10.2024 மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவிபெற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு (scholarships.gov.in, https://socialjustice.gov.in) அனுகலாம்.
மதுரை மாநகராட்சியில் மேயர் நேர்முக உதவியாளர், உதவி கமிஷனர், பில் கலெக்டர்கள் என 40 பேரை ஒரே நாளில் இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்த உதவியாளர் முத்துராமலிங்கம், பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.