India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில் வளாகத்தில், வரும் 28.01.2026 அன்று காலை சுமார் 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நிறுவனம் சார்பில், குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜனவரி 27-இல் நடைபெறுகிறது. மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டக் கிளை அலுவலகங்களில் குறைதீர் முகாம் ஜன 27-ம் ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

திருமங்கலம் எஸ்ஐ பாஸ்கரன் நேற்று வேதக்குளம் பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அதில் சோனை கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து சுங்குராம் பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39), பாலகிருஷ்ணன்(51), செங்குளம் சக்திவேல்(56) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் மின்னல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மதுரை, கோவையில் மின்னல் தரவு திரட்டுதல், ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மதுரை-பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பிப்.1 அன்று காலை 6 மணிக்கு புறப்படும் (06145) சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு பழனியை சென்றடையும். பழனியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு மதுரை வந்தடையும்.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <

மேலூரைச் சேர்ந்த அஜித்குமார் இன்ஸ்டாகிராமில் ‘பிளாக் பாண்டா’ என்ற பெயரில் இருந்து வருகிறார். இவர் மேலூர் மதுரை, சிவகங்கை பகுதிகளில் கடை திறப்பு விழாவிற்கு செல்வதும், அங்கு பொருட்களை பிரபல படுத்துவதில் பணம் பெற்று ஈடுபட்டு வந்தார். இன்று மேலூரில் புதிதாக திறக்கப்பட்ட கடை திறப்பு விழாவின் போது ஏற்பட்ட தகராறில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.