India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை, தத்தனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் 2017ம் ஆண்டு தனது உறவினர் மகளான சிறுமியை (17), கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.காலை10.20 மணிக்கு அரக்கோணத்தில்இருந்து புறப்படும் ரயில்10.40 மணிக்கு திருத்தணி சென்றடையும்.10.50 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் ரயில், 11.15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

மதுரை எச் எம் எஸ் காலனி அருணாச்சலேஸ்வரர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி இசக்கி நாச்சியார். தம்பதியர் இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு மோசடி செய்ததாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு நிரந்தரமாக வேலை கிடைக்காமல் மதுரைக்கு திரும்பி வந்தார். இங்கும் சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் பைக்கில் நேற்று சென்ற போது, வெள்ளமலைப்பட்டி சந்திப்பு அருகே, நாகர்கோயிலை சேர்ந்த ரெம்மிங்டன் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரமேஷ்(23). இவர் மேலூர் திருப்பத்தூர் ரோட்டில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஒய். கொடிக்குளம் கணேசன் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பலமாக அடிபட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.