India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாமிநத்தத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான செந்தில்(35) நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் செந்தில் மனைவி காவியாவிற்கும், கார்த்திக் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் அதை செந்தில் கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதில் ஏற்கனவே 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று காவியா, கார்த்திகையும் கைது செய்தனர்.

பழங்காநத்தம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் போட்டோகிராபர் சிவகுமார்(48). சிறு வயது முதலே இளைப்பு நோய், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கீழவெளி வீதியில் இவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று தலை சுற்றி
கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளந்திரி அருகே பொய்கை கரைபட்டியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி கருப்பாயி(64). இவர் நேற்று முந்தினம் மாலை அழகர் கோவில் ரோட்டில் நடந்து சென்ற போது, தாய் ஓட்டல் எதிரே அதி வேகமாக வந்த கார் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவரை கைது செய்தனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452 2527355
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராமகண்ணன் மகள் விஜய்ஸ்ரீ(13), சிறுமலர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கண்களை மூட முடியவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் நீல நிறமாக இருந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

சோழவந்தான் நகரி நெடுஞ்சாலையில் நேற்று மாலை சுமார் 55 வயது முதியவர் நடந்து சென்ற பொழுது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விஏஓ ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மோதிய வாகனம் கன்டெய்னர் லாரி என தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <

மதுரை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <

மதுரை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <

முதல்வர் ஸ்டாலின் அவர் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.7) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து GRT Grand Hotel சென்று மதியம் தங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்து 7.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.