India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

மதுரை மாநகரில் இன்று (06.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலவளவு வடக்கு காலனியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(44). மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மனைவி ஜெயபாரதி(35)யுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சத்தியமூர்த்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் பாலத்தை பிப்.20 ல் முதல்வர் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இப்பால பணிகளை 2023 செப். 30ல் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமுக்கம் நெல்பேட்டை வரை 2.2 கி.மீ. செல்லுார் பாலம் 800 மீ என 3 கி.மீ கட்டுமான பணிகள் நடந்தன. அமெரிக்கன் கல்லூரி தொடர்ந்த வழக்கால் 6 மாதம் தொய்வு ஏற்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடக்கிறது. பிப்.20ல் திறக்க வாய்ப்புள்ளது.

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் 28-ம் தேதி நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் என்.டி.ஏ (NDA) கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தற்போது மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகை தேதி மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்பப் பாதுகாப்புப் பணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (37). இவர் தனது டூவீலரில் நேற்று வாடிப்பட்டி சென்று விட்டு, மதுரை – திண்டுக்கல் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ரோட்டை கடந்து பெட்ரோல் வாங்கி கொண்டு சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.