Madurai

News February 21, 2026

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 21, 2026

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 20, 2026

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

மதுரை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு அறிவிப்பு!

image

மதுரை: பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களின் சேவையை மார்ச் மாதம் வரை நீட்டிக்க தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. கச்சிகுடா–மதுரை (07191), மதுரை–கச்சிகுடா (07192), ஹைதராபாத்–கன்னியாகுமரி (07230) ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 20, 2026

மதுரை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <>க்ளிக் <<>>செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News February 20, 2026

BREAKING: ஸ்டாலின் CM ஆவார் – உசிலம்பட்டி MLA

image

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியன; அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வென்று முதலமைச்சராக வர வேண்டும் என்றார். ரூ.5,000 நிதி குறித்து விமர்சித்தவர்கள் இன்று அவையில் இல்லை என்றும் கூறினார். காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் என்றும் பாராட்டும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன், ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் திமுக அரசு தொடரும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

News February 20, 2026

மதுரை: +2 மாணவி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்

image

மதுரை, தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆதனன். அவரது மகள் சிவகவியா +2 படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், வீட்டில் சரியாக படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தால் மாணவியை அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று பள்ளி முடிந்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

தற்கொலை தீர்வல்ல..!

News February 20, 2026

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிப்.28 அன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க கட்டணம் இல்லை, கல்விச்சான்று நகல் பயோடேட்டா உடன் வரவேண்டும். பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejops.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

மதுரை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 20, 2026

மதுரை: பேருந்து மோதியதில் மாணவன் பலி

image

பேரையூர் அருகே சாப்டூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(19). இவர் திருமங்கலம் அருகே உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் கல்லூரிக்கு சென்று விட்டு டூவிலரில் பேரையூர் – சாப்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய் மலை பகுதியில் சென்ற போது எதிரே வந்த பஸ் இவரது டூவிலரில் மோதியதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!