India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

ஓசூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் (22), ஆட்டோ மோதி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், சாமல்பள்ளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி வெங்கடேசன் (22), கார் மோதி பலியானார்; அவருடன் சென்ற சந்தோஷ் காயமடைந்தார். இந்த விபத்துகள் குறித்து அட்கோ மற்றும் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே, சிக்னல் இன்றி சரக்கு வேன் திடீரென நின்றதால் கார் மற்றும் லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, மற்றொரு கார் பின்னோக்கிச் சென்றதில் கான்கிரீட் லாரி மீது மோதியது. இவ்வாறு மொத்தம் 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தளி வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி மாது (38), மது பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 1-ம் தேதி மது போதையில் தவறுதலாக திராவகத்தை (ஆசிட்) குடித்த அவர், மயங்கி விழுந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தில் கடந்த டிசம்பர் 12-ம் அன்று தனியார் நிறுவன பேருந்து மீது பன்றி வெடி வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இந்த வழக்கில் சக்திவேல், சேகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.8) சேகர், சக்திவேல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு SHARE!
Sorry, no posts matched your criteria.