Krishnagiri

News August 11, 2024

கிருஷ்ணகிரி அணையில் உயரும் நீர் வரத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர். பி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,073 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.65 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

கிருஷ்ணகிரி ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை ஜாபர் – 9498170295, பருகூர் நாகலட்சுமி – 9498175515, கிருஷ்ணகிரி செந்தில் – 9444672727, ஓசூர்  நாகராஜ் – 9498178859, தேன்கனிக்கோட்டை கிரிஜா – 9498169703. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 10, 2024

கிருஷ்ணகிரி முன்னாள் இராணுவ வீரர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஆர்.பி.எப். கமான்டோ பிரிவினர் மற்றும் முன்னாள் துணை இராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பாக கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய மினி லாரியை கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு அவர்கள் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

News August 10, 2024

ஊத்தங்கரையில் பாஜக மாநில துணைத்தலைவர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரையில், பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மண்டல் தலைவர்களுடன் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இருந்த கருத்து வேறுபாடுகள் கலைந்து மகிழ்ச்சியுடன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

News August 10, 2024

கலெக்டரிடம் நிவாரண நிதியை வழங்கிய பள்ளி மாணவர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 22 ஆயிரத்து 360 க்கான காசோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் இன்று (ஆகஸ்ட்-10) வழங்கினர். உடன் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருந்தனர்.

News August 10, 2024

கிருஷ்ணகிரி: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கடனுதவி

image

தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரியில் 102 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்படுத்தி தருவது, தொழில்,விவசாயத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

News August 10, 2024

கிருஷ்ணகிரி: தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்க விழா

image

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உயர்கல்வி உறுதி திட்டமான தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் மா ஜெகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது மாணவர்களுக்கு வங்கி டெபிட் கார்டு வழங்கப்பட்டது.

News August 9, 2024

ஓசூரில் நெடுஞ்சாலையில் கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று மாலை (ஆகஸ்ட் 9) சுமார் 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெயர் தெரியாத நபர் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 9, 2024

கிருஷ்ணகிரிக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

பர்கூரில் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இன்று வங்கி டெபிட் கார்டுகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சரயு, ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!