Karur

News December 25, 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி.

image

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் “அன்பு, கருணை, மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான இன்று (25/12/2024) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

News December 25, 2024

கரூர் தவெக சார்பில் வேலு நாச்சியாருக்கு நினைவஞ்சலி

image

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரமங்கையின் திருஉருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழகம்‌ சார்பாக கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று மதியழகனால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News December 25, 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

image

தமிழ்நாட்டின் மதுவிலக்கு, ஆயத்தீர்வை, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் வாழும் மக்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் என்றென்றும் ஒற்றை தோழனாய் இருப்பேன் எனவும் கூறினார்.

News December 25, 2024

கரூர்: லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது

image

குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய பாலம், பேருந்து நிலையம், உழவர் சந்தை, நாப்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற செல்வம் (52), ரமேஷ் (50), முகமது இஸ்மாயில் (43), முகமது ரபி (56), ஷாஜகான் (44), செந்தில்குமார் (50), சந்தோஷ் குமார் (33) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

News December 25, 2024

பயணிகள் ரயிலை பொங்கலுக்கு திருச்சி வரை இயக்க கோரிக்கை

image

சேலத்தில் இருந்து கரூருக்கு ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக பயணிகள் ரயில் கடந்த 2013 முதல் தினமும் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்ல வசதியாக பொங்கல் திருவிழாவையொட்டி இந்தப் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 25, 2024

கரூர்: தந்தையுடன் சென்ற சிறுமி உயிரிழந்த சோகம்

image

சோமூர் முத்தமிழ்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் தனது மகள் 6ம் வகுப்பு படிக்கும் ரித்திகாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மொசக்கன்னி முடக்கு வழியே சென்றபோது திடீரென ஆடுகள் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் தவறி விழுந்ததில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கண்ணதாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 25, 2024

திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்

image

திருச்சி – கரூர் இடையே 01.01.2025 முதல் 31.03.2025 வரை மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் (ஞாயிறு தவிர்த்து) புதிய முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதனால் தினந்தோறும் கரூர் – திருச்சி பயணம் செல்லும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 24, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.காற்றாலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
3.அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் – கரூர் எம்பி பேட்டி
4.உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து
5.கரூரில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

News December 24, 2024

உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து

image

கரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் பயில்பவர் குரு பிரசாத். இவர் பொன்னர் சங்கர் வாழ்வியலை 18 மணி நேரம் இடைவெளியின்றி தனி நபராக நடித்துக் காட்டி உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு உலக சாதனை நிகழ்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், துணைப்பொதுச் செயலாளர் நடராஜ் ஆகியோரிடம் மாணவர் குரு பிரசாத் வாழ்த்து பெற்றார்.

News December 24, 2024

கரூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

image

புகழூரில் மாவட்ட அளவில் மாணவ- மாணவிகளுக்கான கராத்தே போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜனவரி 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களை கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷிசரவணன், செயலாளர் ரெசின் செந்தில்குமார் நேற்று பாராட்டினர்.

error: Content is protected !!