Karur

News January 10, 2026

கரூரில் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற முருகன் (54), அம்மையப்பன் (29), மலர்கொடி (41), சண்முகம் (50) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 10, 2026

கரூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

கரூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கரூர் மாவட்டம், கடவூர் அருகே சுருமன்பட்டி சாலையில், ரமணா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவு மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.

News January 9, 2026

கரூர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி நாளை ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க.

News January 9, 2026

கரூர்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

குளித்தலை அருகே பயங்கர விபத்து!

image

கரூர் மாவட்டம் கோட்டமேட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), திண்டுக்கல் ஓதுவார் பள்ளியில் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தார். இன்று இவர் தனது பைக்கில் குளித்தலை – மணப்பாறை சாலையில் கோட்டமேடு யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பிரவீன் குமார் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

கருர்: IOCL-லில் 394 பணியிடங்கள்: தேர்வு எழுதத் தயாரா?

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். https://iocl.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கருர்: IOCL-லில் 394 பணியிடங்கள்: தேர்வு எழுதத் தயாரா?

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். https://iocl.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கரூர் போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய 3 பேர்!

image

கரூர்: புலியூர் முடக்கு சாலை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த நவ பாரதி (28), விக்னேஷ் (24) மற்றும் லாலாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகள், ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

கடவூரில் விபத்து கல்லூரி மாணவன் பலி!

image

கரூர்: கடவூர், வலையபட்டியை சேர்ந்தவர் ரமணா (24). கல்லூரி மாணவரான இவர் நேற்று தனது பைக்கில் சுருமான் பட்டி கிழக்கு பகுதியில் சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர மோட்டார் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. ரமணா தலையில் பலத்த காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். அவரின் தந்தை கணேசன் புகாரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை!

error: Content is protected !!