India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு NH 32 அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால், சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

▶️தக்கலை – 9445854517
▶️மூலச்சல் – 9445854518
▶️வெள்ளிச்சந்தை – 9445854519
▶️திக்கனம்கோடு – 9445854520
▶️இரணியல் -9445854521
▶️குளச்சல் – 9445854523
▶️செம்பொன்விளை – 9445854524
▶️மணவாளக்குறிச்சி -9445854525
▶️பரசேரி – 9445854526
இதர பகுதி எண்களை இங்கே <

குமரி மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை மற்றும் கீரை போன்ற 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 100% அரசு மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த தொகுப்புகளை பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனவர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் அனைத்து மீனவ பிரதிநிதிகள், மீனவ தொழிற்சங்கங்கள் , உள்நாட்டு மீனவ அமைப்புகள் கலந்து கொண்டனர். ONGC நிறுவனம் கன்னியாகுமரி கடல் பரப்பில் அமைக்க திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று மற்றும் கச்சா எண்ணெய் திட்டத்தை கைவிட கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தபட்டது.

ஞாயிறு தோறும் நாகர்கோவிலில் இருந்தும் திங்கட்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் இயங்கும் நாகர்கோவில் தாம்பரம், தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் ரயில் நெல்லை, மதுரை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக நேர் பாதையில் செல்லும் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் சிதம்பரம் மயிலாடுதுறை தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். *ஷேர்

கன்னியாகுமரியில் புறக்கவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக அனைத்து மொழிகளும் பேசும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காதல் ஜோடிகளின் அத்துமீறலை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் குலசேகரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மே 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நடைபெற்ற பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குழித்துறை பத்மநாபபுரம் இரணியல் பூதப்பாண்டி ஆகியவற்றில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தொண்டு புரிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர சமூக சேவை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணை குழு செயலாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
Sorry, no posts matched your criteria.