India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகம் முழுவதும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும் நாம் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். 2025-ஆம் ஆண்டை மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வரவேற்போம். மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும் நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதி தரும் ஆண்டாக அமையட்டும். இனிவரும் காலம் அனைவருக்கும் இனிதாக அமைய வாழ்த்துகள்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் 35 நிமிடங்கள் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 9:45 மணிக்கு பதில் 10:20 மணிக்கு புறப்பட்டு இரவு 10:49 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் இரவு 11:15 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்படும் ரயில்காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வரும். ரயில் 1 மணி நேரம் முன்னதாக வந்தடையும். *ஷேர்*
“உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும்; அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும்; இதுபோல் வரும் வாழ்த்துக்களை தவிர்க்க வேண்டும்” என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேலக்கோதையாரில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கல்லாரில் 36, கீழக்கோதையாரில் 26, பாலமோர் 25, குழித்துறை 10, கன்னியாகுமரி 8, திருவட்டார், முள்ளங்கினாவிளையில் தலா 7, இரணியல், தக்கலை மயிலாடியில் தலா 6, ஆரல்வாய்மொழி 4, பேச்சிப் பாறை, குளச்சல் சுருளோட்டில் தலா 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
குமரியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டு பாலியல் பலாத்காரம் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை தப்பிக்க விட்டதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் வாழ்வில் புதுவசந்தம் நிறைந்து இந்த புது வருடம் உங்களுக்கு பூரிப்பை அளிக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த தடைகள் மற்றும் சோதனைகளை கடந்து புது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம் என அவர் இன்று அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (டிச.31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, திருவள்ளுவர் சிலைக்கு ஏன் விழா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம், திருக்குறள் தமிழர்களின் அடையாளம். அதனால் இந்த விழா கொண்டாடப்படுகிறது கொண்டாடுவோம் என்றார்.
திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று சிலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தினையும் திறந்து வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் 3 புதிய படகுகள் வாங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். *ஷேர் செய்ய்வும்*
Sorry, no posts matched your criteria.