Kanyakumari

News January 4, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.4) காலை 7:45 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. #காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 35வது நாளாக ESI திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. #மாலை 5 மணிக்கு மாணவி மீது பாலியல் கொடுமையை கண்டித்து செண்பகராமன் புதூர் பேருந்து நிலையம் அருகில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News January 4, 2025

ஆழ்கடல் விபத்துகளில் சிக்குவோரை மீட்க நவீன திட்டம்!

image

ஆழ்கடலில் மீனவர்கள் விபத்துக்குள்ளாகும்போது அவர்களை மீட்க நவீன முறையிலான திட்டத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க புதிய பயனாளிகளை தேர்வு செய்து 8ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கவும் கூறப்பட்டது.

News January 4, 2025

கந்துவட்டி வழக்கு – நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டு சிறை !

image

2020ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி கொடுமை தொடர்பான பல வழக்குகளில் நாகர்கோவிலை சேர்ந்த காசி(29) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதில் டிராவிட் என்பவர் வடசேரி போலீசில் அளித்த ரூ.2 லட்சம் கந்து வட்டி தொடர்பான வழக்கில், காசி & புரோக்கர் நாராயணுக்கு 3 ஆண்டு சிறையும், தங்கபாண்டியன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நேற்று(ஜன.3) நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 4, 2025

போக்குவரத்து விதி மீறல்; 3 நாளில் 927 பேர் மீது வழக்கு

image

போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 374 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 927 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.அனுமதித்த நேரம் மீறி இயங்கிய 2 லாரியை பறிமுதல் செய்தனர்.

News January 3, 2025

சென்னை -நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இம்மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் இதை போன்று நாகர்கோவிலில் இருந்தும் சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் 13 மற்றும் 20ம் தேதியும் இயக்கப்படுகிறது. பெரம்பலூர், திருவள்ளூர், அரக்கோணம், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இந்த ரயில் நாகர்கோவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

விஜய் வசந்த எம்.பி நாளைய நிகழ்ச்சி

image

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாளை காலை 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கைப்பந்து போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு களியக்காவிளையில் உணவு திருவிழாவை தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு கருங்கல்லில் மௌன ஊர்வலத்தில் பங்கேற்கிறார்.

News January 3, 2025

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி இம்மாதம் 13 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்தும், 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது .செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, நெல்வேலி நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News January 3, 2025

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த 52 குழுக்கள் அமைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நோய் வாய் நோய் தடுப்பூசி பணி 5 சுற்றுகள் நடந்துள்ளது. ஆறாவது சுற்றில் 58 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர்களைக் கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News January 3, 2025

பச்சை தமிழகம் கட்சி த.வா.க-வுடன் இணைப்பு

image

பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சு.பஉதயகுமார் இன்று(ஜன.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சை தமிழகம் கட்சி, வேல்முருகன் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது; தமிழர்களை ஆபத்துக்குள் தள்ளும் அழிவுத் திட்டங்களை எதிர்க்கவும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பச்சைத் தமிழகம் கட்சி தொடங்கப்பட்டதாக” அவர் கூறியுள்ளார்.

News January 3, 2025

குமரியின் புதிய எஸ்.பி பதவியேற்றார்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு போலீசாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று(ஜனவரி 3 ) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். *ஷேர்*

error: Content is protected !!