India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கடந்த 3ம் தேதி பதவி ஏற்றபின் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு பல்வேறு அதிரடி உத்தரவுகளை போலீசாருக்கு பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நேற்று மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உட்பட 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவு கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோழிக்கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொண்டு வரும் வாகனங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் ISRO – வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக நமது குமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக உயர்வு பெற்றதை எண்ணி உலக அரங்கில் குமரி மாவட்டத்தின் பெருமையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தலைநிமிர்ந்து நிற்கிறது என முன்னாள் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘ISRO’ புதிய தலைவராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் வி.நாராயணனை மனதார வாழ்த்துகிறேன். அவரது தலைமையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி இன்னும் பல சாதனைகளை படைக்கும் என நம்புகிறேன். நாராயணன் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செய்தி என்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் மக்கள் சென்று வர வசதியாக குமரி மாவட்டத்தில் இருந்து இன்று(ஜன.8) முதல் வரும் 20ஆம் தேதி வரை சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. நாகர்கோவில், குமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நாகர்கோவில் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேற்று கூறினர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு, நகை பறிப்பு போன்ற பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, காலதாமதம் இன்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
குளச்சல் மீனவர் ஒருங்கிணைப்பு சங்க பொதுச்செயலாளர் ஆன்றோலெனின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினர் இன்று (8ஆம் தேதி) பருத்தித்துறை கடலில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். ஆதலால் மீனவர்கள் அந்தப் பகுதியில் பிரவேசிக்க வேண்டாம் என்றும், அந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
#இன்று(ஜன.8) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறையில் 38வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது. #மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) புதிய தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவரான சோம்நாத்தின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வி.நாராயணன் ஜனவரி 14 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இவர், திருவனந்தபுரம் வலியமலாவில் LPSC-யின் இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.