Kanyakumari

News January 12, 2025

போலீசார் காவல்துறை மாண்பை காப்பாற்ற வேண்டும்: குமரி SP

image

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(ஜன.11) போலீசாரின் குறைதீர்க்கும் முகாம்  நடந்தது. அப்போது பேசிய SP ஸ்டாலின், “போலீசாருக்கு வார விடுமுறை கட்டாயம் ஆகும். எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். மன அழுத்தத்தை போக்க வாரம் ஒருமுறை யோகா நடத்தப்படும். போலீசார் காவல்துறையின் மாண்பை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

News January 12, 2025

இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன் இன்று சொந்த ஊருக்கு வருகை!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(IS.RO) தலைவராக ஜன.14 அன்று பொறுப்பேற்க உள்ள விஞ்ஞானி நாராயணன், இன்று(ஜன.12) தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். #மாலை 4 மணிக்கு நாகர்கோவில் காட்டுவிளையில் உள்ள அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். #மாலை 6.30 மணி அளவில் அவரது ஊரில் உள்ள கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார்.

News January 12, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.11) காலை 10:30 மணிக்கு தடிக்காரன் கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தடிக்காரன் கோணம் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நடைபெறுகிறது.

News January 12, 2025

கன்னியாகுமரி கடைகளுக்கு GOOD NEWS!

image

குமரி SP ஸ்டாலின் நேற்று(ஜன.11) கூறியதாவது, “மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரவு 11 மணிக்குமேல் கடைகளை திறக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இரவு நேரம் கடைகள் செயல்பட தடை விதிக்கப்படவில்லை” என்றார்.

News January 12, 2025

நாகர்கோவில் ரயில் தாமதமாக வருகை 

image

நாகர்கோவிலில் இருந்து கட்சிக்குடா ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கட்சிக்குடா செல்வது வழக்கம். இன்று(ஜன.12) நள்ளிரவு புறப்பட வேண்டிய ரயில் அதிகாலை 4.15 மணிக்கு மூன்று மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. கட்சிக்குடாவில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில் தாமதமாக வருவதை தொடர்ந்து தாமதமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 12, 2025

தாயை அடித்து கீழே தள்ளி கொலை; மகன் மீது வழக்கு

image

இரணியல் அருகே இலந்தன் விளையைச் சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் பிரபு தாஸ். இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி தாயிடம் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், தாயை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அவர் மறுக்கவே, அவரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்துவிட்டார். இரணியல் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

News January 12, 2025

பொதுமக்கள் எஸ்.பி-யை நேரடியாக சந்திக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தங்களுடைய புகார்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக யாருடைய உதவியும், சிபாரிசும் இன்றி, நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தினமும் 12.00 மணி முதல் 02.00 மணி வரை சந்திக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

News January 12, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுச்சூழல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன. 11) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 11, 2025

திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம்: குமரி எம்.பி

image

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாயின் மணிக்கொடியை காக்க தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று (ஜன. 11) அவர் தியாகத்தை போற்றுவோம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

News January 11, 2025

ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் ரப்பர் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ரப்பர் இங்கு பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 30,000 மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ரப்பருக்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!