Kanyakumari

News March 9, 2026

குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 9, 2026

குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 9, 2026

குமரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News March 9, 2026

குமரியில் 12 அரசு துறை உதவியாளர்கள் இடமாற்றம்

image

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 24 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் உதவியாளர் நிலையில் 12 பேர்களை பணியிட மாற்றம் செய்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார். மாற்றப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக புதிய அலுவலகங்களில் பொறுப்பேற்க அவர் உத்தரவிட்டார்.

News March 9, 2026

குமரி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

குமரி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 9, 2026

குமரி: காங்கிரஸ் கட்சியினர் தொடர் நடை பயணம்

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக 8வது நாளாக கண்டன நடைபயணம் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து கோழிப்போர்விளை முதல் முளகுமூடு வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி லாரன்ஸ் தலைமை வகித்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2026

நாகர்கோவிலில் 16 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் கைது

image

நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது மாணவியும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

News March 9, 2026

குமரி கடலில் 1,448 ஆமை குஞ்சுகள்

image

குமரி மாவட்டத்தில் லெமன் கடற்கரை ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் ஆகிய இடங்களில் முட்டையிடப்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு லெமூர் கடற்கரை மற்றும் துவாரக பதி கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன. இதில், 1448 குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக நேற்று கடலில் விட்டனர்.

News March 9, 2026

குமரி: போலி நகை வைத்து ரூ.4.50 லட்சம் மோசடி

image

படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி( 63). இவர்
நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் குளிச்சாணி பகுதியைச் சேர்ந்த வித்யாதரன் (48) மற்றும் நெயாற்றின் கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ஆகிய இருவரும் 111.90 கிராம் போலி தங்க நகையை அடகு வைத்து சுமார் ரூ.4.50 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2026

மழைநீர் ஓடையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

image

ஏற்றக்கோடு புத்தன் விளையை சேர்ந்தவர் சிங் (38). 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கேபிள் வேலை செய்த போது விபத்து ஏற்பட்டு இடது புற கணுக்காலின் கீழ் பகுதி அகற்றப்படது. இந்நிலையில் வீயன்னூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு வந்த சிங் அப்பகுதியில் உள்ள மழைநீர் ஓடையில் விழுந்துள்ளார். இதில் ஏற்கனவே காயம் ஏற்பட்ட காலில் மீண்டும் காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!