India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

சூழால் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (53). இவர் வீட்டின் முன்பு முகத்தில் காயத்துடன் அசைவற்ற நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<

கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 7, 14,21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை ஐந்து 50 மணிக்கு புறப்படும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மதுரை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக திருப்பி விடப்படும் என்று ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.இதைப்போல் ஹைதராபாத் சிறப்பு ரயிலும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரியில் 4 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அஜிதா கிள்ளியூர் வட்டாட்சியராகவும், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தோவாளை வட்டாட்சியராகவும், நிலமெடுப்பு தனி வட்டாட்சியர் வினை தீர்த்தான் பத்மநாபபுரம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன் ரயில்வே நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் அம்மு, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று முறைப்படி விருப்ப மனுவை வழங்கினார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகியான இவரது இந்த நடவடிக்கை, தொகுதி உடன்பாடு மற்றும் வேட்பாளர் தேர்வுக் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.