Kanyakumari

News January 17, 2025

கேரள கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று(ஜன.16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகள் கோழி கழிவுகள்கொண்டு வரப்படுவதை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.17) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறையில் மருத்துவர் நியமிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நாகர்கோவில் வடசேரியில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.#மாலை 4 மணிக்கு பிணந்தோடு சந்திப்பில் நாதக ஆர்ப்பாட்டம்.

News January 16, 2025

அகதிகள் முகாமில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

கோழிவிளையில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிதரன் (34). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சசிதரன் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம். இதனால் மன உளைச்சல் அடைந்த சசிதரன் நேற்று 15ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 16, 2025

மேம்பாலம் வழியாக இயக்கப்பட்ட லாரிகள் பறிமுதல்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொண்டு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.16) காலை 6:00 மணிக்கு தடை செய்யப்பட்ட பகுதியான மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்ற 10 கனிம வள லாரிகளை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் பறிமுதல் செய்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 16, 2025

2 மணி நேரம் தாமதமாக தொடங்கய கப்பல் போக்குவரத்து

image

குமரி கடலில் இன்று காலை 6 மணி முதல் காணும் பொங்கலை ஒட்டி படகு போக்குவரத்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து 6 மணிக்கு தொடங்கப்படவில்லை. பின்னர் 2 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

News January 16, 2025

காணும் பொங்கல் – குமரியில் மட்டும் 250 POLICE!

image

தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா மயமான குமரிக்கு காணும் பொங்கல் கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று(ஜன.15) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குமரியில் மட்டும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.

News January 16, 2025

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#புதுக்குடியிருப்பில் மாலை 6 மணிக்கு மாநில அளவிலான கைப்பந்து போட்டி.#புவியூர் முத்தாரம்மன் கோவில் பொங்கல் விழாவில் காலை 9 மணிக்கு  கலை போட்டிகள், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம்.#சந்தையடி பொங்கல் விழாவில் காலை 8 மணிக்கு கோமாதாவுக்கு அமுது படைத்தல், 10 மணிக்கு விளையாட்டு போட்டிகள்.#நாகர்கோவில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியன நடைபெறும்.

News January 16, 2025

குமரி எஸ்பிக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ தாரகை

image

தாரகை எம்எல்ஏ நேற்று(ஜன.15) வெளியிட்ட அறிக்கையில், நான் வைத்த கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேநீர் கடைகளை மீண்டும் இரவு நேரத்திலும் திறப்பதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு என்னுடைய சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

News January 16, 2025

மாட்டுப் பொங்கல்: பூம்புகார் படகில் 11 ஆயிரம் பேர் பயணம்

image

கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட பொங்கல் விடுமுறை ஒட்டி நேற்று(ஜன.15) அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெற்றது. இதில், நேற்று மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

குமரியில் மீண்டும் இரவு கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு

image

குமரி மாவட்டத்தில் புதிதாக எஸ்பி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் இந்த முடிவை பரிசீலனை செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கையை எஸ்பி ஸ்டாலின் முன்வைத்து வந்தனர், இரவு நேர தேனீர் கடை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சிலகட்டுப்பாட்டுகளுடன் தேநீர் கடைகள் செயல்பட உத்தரவு.

error: Content is protected !!