India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.

குண்டூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் திருச்சி, மதுரை வழியாக இயங்கும் வண்டி எண்: 07229/30 கன்னியாகுமரி – ஹைதராபாத் வாரந்திர சிறப்பு ரயில் 10.10.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் இன்று (ஆக.7) தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மீனவர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி கடல் பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிப்பு செய்யக்கோரி கன்னியாகுமரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.7) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 5200 பேர் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.11 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.51 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.6
6 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 231 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

கன்னியாகுமரி மீனவர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி கடல் பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிப்பு செய்யக்கோரி கன்னியாகுமரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.7) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 5200 பேர் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி பட்டதாரி நண்பர்களே.. இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட 277 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (07.08.2025) கடைசி நாள். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மறக்காமல் <

குமரிக்கு நண்பர்களாவோ, குடும்பமாகவோ சுற்றுலா செல்பவர்களா நீங்க.. இனிமே தங்குவதற்கு அதிக பணம் செலவழித்து LODGE தேடி அலைய வேண்டாம். உங்களுக்காகவே அரசு போக்குவரத்துத்துறையின் மூலம் பயணிகள் தங்கும் விடுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சமாக சாதாரண அறைக்கு ரூ.280ம், டீலக்ஸ் A/C அறைக்கு ரூ.1500ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பரை 94877 11020 SAVE பண்ணிக்கோங்க. *ஷேர்*
Sorry, no posts matched your criteria.