India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி அருகே உள்ள கொட்டாரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று(ஜன.17) அரிசி, எள்ளு பருப்பு, பயறு, காணம் போன்ற நவதானியங்களை கொண்டு எம்.ஜி.ஆரின் உருவத்தை வடிவமைத்துள்ளார். நவதானியங்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
#இன்று(ஜன.18) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 47வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு ஆரல்வாய்மொழி எம்ஜிஆர் நகர் சந்திப்பில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.# மாலை 6 மணிக்கு தக்கலையில் நாகூர் அனிபா நூற்றாண்டு விழா ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பங்கேற்கிறார்.
கன்னியாகுமரி கடலில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இன்றும்(ஜன.18) சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருவதால், குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்தபின் போக்குவரத்து நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்கள் காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவதால், நாகர்கோவில் மாநகராட்சியில் இந்த மாத கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த மாதம் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதன் மூலம் இந்தியாவின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை அமையும் என்று ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.
குளச்சல் துறைமுகத்தில் ஸ்டாலினி ஹட்சன் அலெக்ஸ் என்பவர் படகில் ஒடிசாவை சேர்ந்த சிவா என்பவர் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை விசைப்படகு மீன்பிடிக்க செல்ல தயாரான போது சிவா மற்றும் உடன் இருந்த தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் என்பவர் சிவாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். அஜினை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக குளச்சல் கடலோர குழுமா பாதுகாப்பு போலீசார் இன்று தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆனது நாளை (18.01.2025) காலை 9:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 18 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர்
2022ல் கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவர் கஷாயத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அவரின் காதலி க்ரீஷ்மா, க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் இருந்து க்ரீஷ்மாவின் தாய் விடுவிப்பு. தண்டனை குறித்த விவரங்கள் நாளை (ஜன.18) அறிவிக்கப்படவுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு தை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. 24ஆம் தேதி நடைபெறும் 8ஆம் நாள் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சியும், 27ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைப்பாளர்களை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நியமித்துள்ளார். அதன்படி குமரிக்கு சகாயராஜ் சீனிவாசன், குளச்சலுக்கு சாமுவேல் சேகர் டொனல், பத்மநாபபுரம் தொகுதிக்கு ஜோன்ஸ் இம்மானுவேல், ரத்தினகுமார் விளவங்கோடுக்கு ஜோதிஷ்குமார், சுரேஷ் கிள்ளியூருக்கு கோபன், சுரேஷ் நாகர்கோவிலுக்கு சிவபிரபு, சகாய பிரவீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.