Kanyakumari

News August 9, 2025

குமரி: பூம்புகார் படகு சேவை START..!

image

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து 24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம். SHARE IT..!

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

image

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக லியோ டேவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.

News August 8, 2025

குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

image

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

குமரி: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். #SHARE பண்ணுங்க

News August 8, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.8) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.96 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.21 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.52 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 297 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 8, 2025

குமரி: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..குட் நியூஸ்!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (ஆக.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துளார். இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 8, 2025

கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

image

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!