India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் குழும போலீசார் அதி விரைவுப் படையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 68 கிலோ மீட்டர் தூர கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் சந்தேகத்திற்கிடமானவர்கள் யாராவது வந்தால், அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
#இன்று(ஜன.25) காலை 9:30 மணிக்கு விவேகானந்தர் கேந்திர வளாகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு 3வது நாள் நிகழ்வில் சபாநாயகர் பங்கேற்கிறார்.#மாலை 5 மணிக்கு ஆற்றூர் சந்திப்பில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.#மாலை 6 மணிக்கு நாகர்கோவிலில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.#மாலை 5.30 மணிக்கு கொட்டாரம் சந்திப்பில் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
நாடு முழுவதும் இன்று(ஜன.25) தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாம் வாக்களிக்கவில்லை எனில் நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது மிக முக்கியமான விஷயம் என்பதை தேசிய வாக்காளர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது என கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ அனைவருக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
15வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நாளை (25.01.2025) காலை 9.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக முகப்பிலிருந்து புறப்படும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் தெ.தி இந்துக்கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1,2 மாம்பழத்துறை ஆறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு பிப்.,28ஆம் தேதி அணைகள் மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் பிப்ரவரி 28ஆம் தேதி அணைகள் மூடப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்மீனவர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரில் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். *மீனவ நண்பர்களுக்கு பகிரவும்*
குமரி மாவட்டத்தில் பன்றி பண்ணைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு உள்ள இடங்களில் பன்றி பண்ணைகளை அகற்றுவதில் தவறு இல்லை. ஆனால் எவ்வித எதிர்ப்பும் இல்லாத பன்றி பண்ணைகளை அகற்ற உத்தரவிடுவது ஏற்புடையது அல்ல. பன்றி பண்ணைகளில் பணிபுரியும் ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைக்காதீர்கள் என விசிக மாவட்ட செயலாளர் அல்காலித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் நேற்று கூறியதாவது, காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக குழு ஒன்று அமைத்து அதன் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆண்டு முதல் இதுவரை வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.45 லட்சம் வனத்துறையால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.