India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#இன்று(ஜன.20) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தொழிற்சாலை அலுவலகம் முன்பு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 48வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம்.#காலை 11 மணிக்கு சிவசேனா சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.#மாலை 5 மணிக்கு கண்ணனாகம் சந்திப்பில் அதிமுக கூட்டம் நடைபெறுகிறது.
பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இன்று(ஜன.20) திறக்கின்றன. அதன்படி, குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு இன்று தொடங்கி நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில், புதிதாக உருவாகி இருக்கும் 2025 – 2027 பருவத்திற்கான மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு, நேற்று(ஜன.19) கே.டி.சுரேஷ் என்பவர் பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கிழக்கு மாவட்ட தலைவராக கோபகுமார் என்பவரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் உடப்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக R.T சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவராக கே.கோபகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்இன்று (ஜன.20) பொறுப்பேற்றுக் கொண்டனர். 2025 முதல் 2027 வரை இவர்கள் இந்த பதவியில் நீடிப்பார்கள். புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று(ஜன.19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முதலே தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிகையாக இருப்பது நல்லது. SHARE IT.
ஆந்திர மாநில அரசு வழங்குவதுபோல் உதவித்தொகை வழங்க வேண்டும், விண்ணப்பித்த ஒன்றரை வருடங்களாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனே உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.21ஆம் தேதி காலை 10 மணிக்கு குமரி ஆட்சியர் அலுவலகம், தக்கலை தாலுகா அலுவலகம், கருங்கல் ராஜீவ் காந்தி சிலை உட்பட 6 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த மாற்றுத்தி றனாளிகள் முடிவு செய்துள்ளனர்.
குமரி சன் செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் நேற்று(ஜன.18) அதிகாலை அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அணைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அதே கடற்கரை பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் போராடி அணைத்ததால் சீசன் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பெரும் தீ விபத்தில் இருந்து தப்பின.
#இன்று(ஜன.19) காலை 10 மணிக்கு பெரியார் குறித்து அவதூறு பேசிய நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்கரை சந்திப்பில் பெரியார் தொழிலாளர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடக்கிறது. தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்கிறார்.#மாலை 6.30 மணிக்கு தேங்காய் பட்டணம் சந்திப்பில் தவ்ஹீத் ஜமாத் கூட்டம் நடைபெறுகிறது.
2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கிவழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற இருப்பதாக TNSTC CITU தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை, ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கூறிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.