Kanyakumari

News February 17, 2025

குமரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது ஆகிய பணிகளுக்காக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி என்பவர் பொறுப்பாளராக அதிமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News February 17, 2025

தாது மணல் எடுத்த விவகாரம்; நீதிமன்றம் உத்தரவு

image

குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் தொடரப்பட்ட வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புவழங்கி உள்ளது. கொள்ளை வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

News February 17, 2025

குமரி போலீஸ் வாகனங்கள் ஏலம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 21.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.*ஏலம் எடுக்கும் நண்பர்களுக்கு பகிருங்கள்*

News February 17, 2025

இந்து சமயபேரவை தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

image

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சிவ தொண்டர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபயணமாகவும் 12 சிவாலயங்களையும் வணங்கி வருவது வழக்கம். எனவே அந்த இரண்டு தினங்களும் 12 சிவாலயங்களுக்கு செல்லும் வழிகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமயப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்ி.

News February 17, 2025

நரிச்சிப் பாறையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் காண்போரை கவரும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க நரிச்சிப்பாறை உள்ளது. மாம்பழத்து துறையாறு அணையை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் நரிச்சிப்பாறையையும் பார்வையிட்டு அதனையும் போட்டோ எடுத்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

News February 17, 2025

“கல்வி நிதி வழங்காவிட்டால் மாணவர்களை திரட்டி போராட்டம்”

image

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய எஸ்எஸ்ஏ கல்வி நிதி ரூ.2500 கோடியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. உடனடியாக அந்த நிதியை வழங்க வேண்டும், இல்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

News February 17, 2025

மின் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? அதிகாரி விளக்கம்

image

குமரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’புதிதாக கட்டிடங்கள் கட்டும்போது உயர் மற்றும் தாழ்வழுத்த மின்கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் செய்ய வேண்டும்; வர்ணம் பூச்சு மற்றும் பூச்சிப் பணிகளுக்காக மரம் மற்றும் இரும்பு கம்பிகளால் சாரம் கட்டும் போது மின் கம்பிகளில் இருந்து போதpய இடைவெளி விடவேண்டும்’ என கூறியுள்ளார்

News February 17, 2025

பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

image

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

News February 17, 2025

தாது மணல் கொள்ளை வழக்கு CBIக்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

image

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு CBIக்கு மாற்றப்பட்டுள்ளது. விவி மினரல், டிரான்வேல்ட் கார்னெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளை வழக்கில், உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், அவற்றின் வரவு செலவை கணக்கை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்ககு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!