India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.

குமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி கிலோ 121 ரூபாய்க்கு கறிக்கோழி விற்பனை செய்யபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கறிக்கோழி விலை கிலோ 151 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழிகள் முழு எடையை எட்டுவதற்கு முன்பே வெப்பம் காரணமாக இறந்து விடுவதால் விலை உயர்ந்துள்ளது.

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

குமரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: வீட்டில் இருந்தபடியே 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி telegram, whatsapp கணக்கில் லிங்க் கிளிக் செய்து போட்டிகள் நடத்தப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறை சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெறும் வசதியை விவேகானந்த கேந்திரம் செப்.11-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. yatra.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என விவேகானந்தா கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிரகோடு அருகே இலியான் விளையைச் சேர்ந்தவர் கஸ்தூரி (50). இவரது கணவர் குடிபோதையில் இவருடன் சண்டை போட்டு உள்ளார். அப்போது அவர் கத்தியால் கஸ்தூரி கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள நேரிடும். இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு குமரி மாவட்ட அதிகாரியை 04652-233213 அணுகலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.