Kanyakumari

News February 19, 2025

மூணார் விபத்தில் இறந்து போன மாணவிகள் விபரங்கள்

image

நாகர்கோவில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்து கேரள மாநிலம் மூணாறில் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மாணவிகள், ஒருவர் மாணவர் என மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளில் வேணிகா கன்னியாகுமரி அருகே கனகப்புரத்தைச் சேர்ந்தவர், ஆதிகா திங்கள் சந்தையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

News February 19, 2025

சமண பள்ளியாக செயல்பட்ட சிதறல் மலை கோவில்

image

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே சிதறாலில் வரலாற்று சிறப்புமிக்க சமண மலைக்கோவில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரையிலும் முனிவர்கள் இங்குள்ள கோவில் குகைகளில் வாழ்ந்ததாக சான்றுகள் உள்ளன. சமணர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான சிதறல் மலை கோவில்களில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள் இங்கு சமணப்பள்ளி ஒன்று செயல்பட்டதற்கான சான்றாக உள்ளது. இந்த கோவிலை ஏராளமானவர்கள் வந்து பார்வைக்கு செல்கிறார்கள்.

News February 19, 2025

மீனவர்களின் சந்தா தொகை இன்று முதல் விடுவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி மீனவர்களுக்கு கருவூலம் மூலம் வழங்கிட தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.3 ஆயிரம் மட்டும் பயனாளிகள் வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகள் சந்தா தொகை ரூ.1500 இன்று (பிப்.19) ஆம் தேதி முதல் மீனவ பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும் என்றார்.

News February 19, 2025

‘மஞ்சப்பை விருது’ : ரூ.10 லட்சம், ரூ,5 லட்சம் பரிசு அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2வது பரிசாக ரூ.5 லட்சமும், 3வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 1ஆம் தேதி ஆகும்.

News February 19, 2025

குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் இல்லை: அதிகாரிகள் விளக்கம்

image

கன்னியாகுமரி கடலில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கூண்டு பாலத்தின் கண்ணாடியில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்ணாடியை பாலத்தில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிக்கான் ரசாயனக் கலவை வெயில் காரணமாக இளகி உள்ளதே தவிர, பாலத்தில் எந்த பிரச்னையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 19, 2025

சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதித்திடுக!

image

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் வெளியிட்ட செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் பிரபலமான சிவாலய ஓட்டம் பிப்.25,26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி சிவ பக்தர்கள் ஓடிச்சென்று கோவில்களில் வழிபடும் நிகழ்வு நடைபெறும். எனவே இந்த நாட்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு குமரி மாவட்டத்தில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News February 19, 2025

குமரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

image

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியில், அரபிக்கடல் தரை காற்று பிற்பகல் நேரத்தில் தற்காலிக காற்று முறிவை ஏற்படுத்துவதால் இன்று(பிப்.19) ஆறுகாணி, பத்துகாணி, நெட்டா, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட விளவங்கோடு தாலுகா பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் நேரத்தில் மாலை நேரத்தில் மேக கூட்டங்கள் உருவாகி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 19, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.19) காலை 10 மணிக்கு புதிதாக கொண்டுவரப்பட உள்ள வழக்கறிஞர் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை நீதிமன்றங்களில் இன்று வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு செய்கின்றனர்.#மாலை 6 மணிக்கு புத்தேரியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலையில் புழுதி பறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 19, 2025

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் ஏற்பாட்டில், 24 ஆம் தேதி அன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 25 ஆம் தேதி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தங்க மோதிரங்களை வழங்குகிறார் என அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News February 19, 2025

குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் சிலிக்கான் சேதம்

image

கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள கண்ணாடிகளின் நடுவே ஒட்டப்பட்டிருக்கும் சிலிக்கான் சேதமடைந்திருப்பதால் அதனை விரைந்து சரிசெய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன்.

error: Content is protected !!