India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தக்கலை அருகே பருத்தியறை அருள்தாஸ் என்பவரின் வீட்டில் தக்கலை போலீசார் திடீர் சோதனை நடத்திய போது ஒரு தொட்டியில் கஞ்சா செடி இருந்துள்ளது. அவரது மகன் அஜின்(26) விசாரித்தனர். சென்னையில் டீ மாஸ்டராக இருந்த அஜினுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், ஒரு முறை வாங்கிய கஞ்சா பொட்டலத்தில் இருந்த விதையை முளைக்க வைத்து செடியாக வளர்த்ததாகவும் போலீசிடம் கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

தக்கலை சரல்விளையில் வசிக்கும் ஷேக் முகமதுவின் மகன் பயாஸ் அகமது(16). தக்கலை அரசு பள்ளியில் 11.ம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று (செப்.23) நண்பர்களுடன் வள்ளியாற்றில் குளிக்கச்சென்றார். குளித்த பின்னர் பயாஸ் அகமது ஆற்றங்கரையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக்கூறினர். கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் மேரிலீலா (65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் ஒரு சொத்தை விலைக்கு வாங்கினார். அப்போது இடைதரகராக செயல்பட்ட விஜயகுமார் என்பவர் சொத்தின் விலையை விடஅதிகமாகரூ.4.20 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த மேரிலீலா அந்த பணத்தை விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இது பற்றி தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு நெல் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அம்மன் ஊர்வலத்தில் பங்கேற்க சமயபுரம் ஜெயா யானை வருகிறது. அதற்கான ஆணை வனத்துறையினரால் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் கோவிலில் இருந்து ஜெயா யானை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நாகர்கோவில் அருகே உள்ள குருந்தன்கோடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது போதிய அளவு இருப்பு உள்ளதா பாதுகாக்கப்பட்டு வரும் நெல்களின் தரம் சிறந்ததாக உள்ளதா மேலும் ஸ்டாக் வைக் போதிய இருப்பிட வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலம் பொழியூர் கடற்கரையில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வீடியோ எடுத்து மிரட்டியதாக குமரி காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்தாக யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. கேரளாவில் நடந்த இந்த சம்பவத்திற்கும் குமரி காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்த ரம்யா, அவரது கணவர் சுரேஷ் மற்றும் அனுசியா ஆகிய 3 பேரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்.

குமரி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த லிங்கில் <
Sorry, no posts matched your criteria.