Kanyakumari

News March 5, 2025

நாக தோஷம் நீக்கும் நாகர்கோவில் நாகராஜா கோவில்!

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அவர்கள் நாகராஜருக்கு மஞ்சள் பொடி தூவி, பால் ஊற்றி வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

News March 5, 2025

குமரி: 10th,+1,+2 பொதுத்தேர்வு தொடர்பாக புகார் தெரிவிக்கனுமா?

image

குமரியில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் (94983 83075, 94983 83076) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த செய்தி மூலம் பிறரும் பயன்பெற *ஷேர் செய்யுங்கள்.

News March 5, 2025

குமரி: மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி முகாம்

image

நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் குமரியில் நேற்று(மார்ச் 4) தொடங்கியது. காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் குத்துவிளக்கு ஏற்றி முகமை தொடங்கி வைத்தார். கவுன்சிலின் பொறுப்பு, கடமைகள் மற்றும் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் ராஜா மணி, மகாதேவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

News March 5, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 5) காலை 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் தாமரை குளத்தை தூர்வாரக் கோரி நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.#மாலை 4 மணிக்கு மீனவர்களை மீட்க குமரியில் வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.20 மணிக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பார்வதிபுரம் TNEB SE அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

News March 5, 2025

வைகுண்டர் வழி நின்று மனிதம் காப்போம் : முதல்வர் ஸ்டாலின்

image

வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் 193ஆம் பிறந்தநாள்! எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!

News March 5, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

image

கன்னியாகுமரி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரியில் இருந்து இம்மாதம் 12 மற்றும் 14ஆம் தேதிகளில் புறப்படும் ரயில் சென்னை கடற்கரை, பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.என்று தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 4, 2025

பத்திரிகை நிரூபர்கள் எனக்கூறி பணம் பறித்தால் நடவடிக்கை!

image

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவன அதிபரை மிரட்டி பத்திரிகை நிரூபர்கள் என்று கூறி பணம் பறித்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News March 4, 2025

குமரி: 4 ஆண்டுகளில் 10 யானை, 2 புலிகள் உயிரிழப்பு

image

இன்று உலக வன விலங்குகள் தினம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 யானைகள் மற்றும் 2 புலிகள், 1 சிறுத்தை மரணம் அடைந்துள்ளது. இவைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 4, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.27 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 24.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 3.54 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 3.64 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 245 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 51 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 4, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 85வது நாளாக கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி கோட்ட அரசு பணிமனைகளில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நடத்துநர் நியமனம் செய்வதை கண்டித்து செட்டிகுளம் ராணி தோட்டம் TNSTC பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

error: Content is protected !!