Kanyakumari

News September 26, 2025

குமரி பகவதி அம்மனுக்கு 21 கோடியில் திருப்பணி

image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ. 21 கோடி 95 லட்சம் 40 ஆயிரம் செலவில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு சமீபத்தில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இக் கோபுரம் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முழு தொகையும் உபயமாக வழங்குகிறார். அதற்கான மாதிரி வரைபடத்தை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இன்று வழங்கினார்.

News September 26, 2025

குமரி: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

குமரி மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 26, 2025

BREAKING குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (செப் 26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார். மாவட்டத்தில் நேற்று முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போதும் விடாமல் பெய்து வரும் மழையினால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

குமரி: மலை உச்சியில் மாட்டிக் கொண்டவர்கள் மீட்பு

image

குளச்சல் கண்ணனூர் விளை ஜெபவிஜி(25) மற்றும் பிரவீன், ஜான் கிப்சன், ஜேக்சன் ஆகியோர் சேர்ந்து 24.ம் தேதி தக்கலை வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரிமலைக்கு இயற்கையை ரசிக்கச் சென்றனர். திடீரென பாதை மாறி மலையுச்சியில் சிக்கி, மழையில் நனைந்து மாட்டிக்கொண்டனர். நேற்று காலையிலும் வழிதெரியாதவர்கள் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததை அடுத்து தக்கலை தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். 

News September 26, 2025

அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

image

குமரி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு –
தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி டிச.8ம் தேதி வரை நடத்தப்படுகிறது. போட்டிக்கான கடிதத்தை எனது முன்மாதிரி கடிதம் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும் உள்நாட்டு கடித பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.

News September 25, 2025

குமரியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

image

பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர், சிறந்த ஓவியர், திரைப்பட விமர்சகர் போன்ற பன்முகத் தன்மை கொண்ட வே.ஜீவானந்தன் என்பவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாக அப்பகுதியை சார்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News September 25, 2025

அண்ணா பிறந்தநாளில் சைக்கிள் போட்டி – ஆட்சியர் தகவல்

image

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி ஆண்டுதோறும் செப்.மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 27 அன்று காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News September 25, 2025

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமரா

image

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சுமார் 1350 கண்காணிப்பு கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பெருமிதம்.

News September 25, 2025

சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு கூட்டம்

image

குமரி நகராட்சியில் சுற்றுலா வளர்ச்சிதிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அழகுமீனா இன்று அனைத்து துறை அதிகாரிகள், வியாபாரிகள், லாட்ஜ் அதிபர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆணையர் கண்மணி, சுற்றுலா அலுவலர் காமராஜ், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் கார்த்திக், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகமேலாளர் முருக பூபதி, பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் பங்கேற்றனர்.

News September 25, 2025

குமரியில் கத்தியால் குத்திய பெண் போலீஸ்

image

குலசேகரம்புதூரை சேர்ந்த சுரேஷின் மனைவி சந்தனகுமாரி(34)  ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுகிறார். கணவன், மனைவியிடையே நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அங்கு வந்த சுரேஷின் தம்பி முருகன் ,”ஏன் அண்ணனிடம் சண்டை போடுகிறீர்கள்?” என சந்தனகுமாரியிடம் கேட்டுள்ளார். உடனே முருகனை, சந்தனகுமாரி கத்தியால் குத்தியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!