India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.15 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 175 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 52 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#இன்று(மார்ச் 12) காலை 10 மணிக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கு விரிவுபடுத்தி அரசாணை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஓய்வூதியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேப்பமூடு பூங்கா முன்பு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும்(மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்றும் இம்மாவட்டங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரும் இன்று பொதுமக்களுக்கு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காளிகேசம் சுற்றி உள்ள மலை பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலமான காளிகேசம் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில் இந்த ரயில் விடப்படவுள்ளதாக தகவல். இது வெற்றி பெறும் நிலையில் குமரி – ஜம்மு காஷ்மீர் ரயில் இயக்கப்படும். SHARE IT.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.13 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.72 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.82 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 114 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 21 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#மாலை 4 மணிக்கு ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் உயர்த்தி வழங்க வலியுறுத்தி குலசேகரம் சந்திப்போம் முன்பு எஸ்டேட் ஒர்க்கல்ஸ் ஆர்ப்பாட்டம்.#இன்று(மாரச் 11) மாலை 5:30 மணிக்கு வங்கியில் போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வெட்டூர்ணிமடம் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#மண்டைக்காடு கோவிலில் 10ஆம் நாள் கொடை விழா நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் குமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட 83 கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக விளையாட்டு அணி அமைப்பாளருமான பிரபா ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘TN ALERT’ செயலியின் வழியாக மழை விவரங்களை தெரிந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.