India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மண்ணெண்ணெய் அரிசி உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை அதிகாரிகள் மட்டும் போலீசார் பறிமுதல் செய்து வரும் நிலையில் இன்று காலை கொல்லங்கோடு அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது குடிநீர் ஏற்றி செல்லும் வண்டியில் நூதன முறையில் மண்ணெண்ணெய் கடத்திய வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <

ரீத்தாபுரம் கடம்பறவிளையைச் சேர்ந்த AC மெக்கானிக் போஸ் அலெக்ஸ்(54). நேற்று (செப். 26) இவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், போஸ் அலெக்ஸ் ஏற்கனவே இறந்ததாக கூறினர். குளச்சல் போலீஸ் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் குறைதீர்க்கும் வகையில் மனம் திறந்த நிகழ்ச்சியை எஸ்பி ஸ்டாலின் நடத்தி வருகிறார். இதன் மூலம் இடமாற்றம் கோரி விண்ணப்பித்த 36 போலீசாருக்கு இடமாற்ற உத்தரவை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று வழங்கினார். அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்கிறது. மணலோடையில் 180.8 மி.மீ, அருமனையில் 175.6 மி.மீ, எடைக்கோட்டில் 160.8 மி.மீ என பல இடங்களில் 100 மி.மீக்கு மேல் மழை பதிவானது. ஆறுகள் நிரம்பி ஓட, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி சில இடங்களில் வனத்துறை நுழைவை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு நடைபெற்று வந்தது.இன்று கடைசி நாள் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் (அக்.6ம் தேதி) காலாண்டு தேர்வின் கடைசி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட கல்வி அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்டசெய்தி; மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம், குழந்தைகள் வெளியில் விளையாட சென்றால் பெற்றோர்கள் உடனிருந்து கண்காணிக்க வேண்டும், உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதையும், நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டுகோள்.
Sorry, no posts matched your criteria.