India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைகால வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்வது குறித்து சுகாதாரத்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்; ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சம் ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கவேண்டும்; மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவுக்கு, உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழையும் விருதையும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.*ஷேர் பண்ணி எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க*
குமரி விவேகானந்தபுரத்தில் உள்ள கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் 6500 திருப்பதி லட்டு கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு இன்று(மார்ச்.8) முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க*
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள தெருவில் இன்று காலை,கல்லால் தாக்கி டூ வீலருடன் மர்ம கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள தெருவில் இன்று காலை,கல்லால் தாக்கி டூ வீலருடன் மர்ம கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார்.
கன்னியாகுமரியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
திருவட்டாறு அருகே செங்கோடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பேபி சுலக்சனா வயது 62. இவரது கணவர் கிறிஸ்டோபர் வயது 66. இவர் சைக்கிளில் பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது, வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மேரிசுஜா(36). இவரது மகன் 5 வகுப்பு படித்து வருகிறார். மேரிசுஜா நேற்று மாலை மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மிடாலக்காட்டில் இருந்து கருங்கல் நோக்கி டூவீலரில் சென்றுக் கொண்டிருந்தார். காக்கவிளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த சொகுசு கார் மேரி சுஜாவின் டூவீலர் மீது மோதியது. இதில், மேரிசுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குமரி மாவட்டத்தில் இம்மாதம் 9 மற்றும் 16 தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் ஈர நிலம் மற்றும் காடுகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். 9ம் தேதி ஈர நில பறவைகள் கணக்கெடுப்பும் 16ஆம் தேதி காட்டுப் பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற இருக்கிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
நாளை (மார்ச்.8) மாலை 6 மணிக்கு நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இரவு வான்நோக்கல் நிகழ்வு (*Night Sky Watch* ) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு கோள்களின் அணி வகுப்பை தொலைநோக்கி மூலம் கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறக்காம நண்பர்களுடன் போய் கோள்களை பாருங்க மக்களே. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
Sorry, no posts matched your criteria.