India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
புனேயிலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று காலை 11.30 மணி அளவில் ரயில் வந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் வந்த போது என்ஜினை அடுத்துள்ள பெட்டியில் ஒரு பை அனாதையாக கிடந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மை சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நாளை(மார்ச் 11) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இத்தேரோட்டத்தில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, ஆட்சியர் அழகு மீனா மீனா, எஸ்பி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.18 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.40 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.92 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 3.02 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 113 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#இன்று(மார்ச் 10) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளர்கள் 90வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#பகல் 2 மணிக்கு கலத்துப் பாடு ஸ்ரீ கண்டம் சாஸ்தா கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் நடைபெறுகிறது.#இரவு 9:30 மணிக்கு மண்டைக்காடு கோவிலில் பெரிய சக்கர தீவட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்து குவித்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று(மார்ச் 9) கடற்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த வேலு எரித்து கொலை செய்யப்பட்டது, தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி திருமலாபுரத்தைச் சேர்ந்த சுதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, மது குடிப்பதற்காக 150 ரூபாய் வேலு பாக்கெட்டில் இருந்து எடுத்ததாகவும், அவர் காட்டிக் கொடுத்து விடுவார் என கல்லால் தாக்கி எரித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளார். *ரூ.150 க்காக கொலையா? உங்கள் கருத்தை கமெண்ட் பன்னுங்க*
கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இம்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சூறைக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை நாளை திங்கட்கிழமைக்குள் முடித்து விடுவதும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி மற்றும் வைபர் இணைப்பு பெற்று பணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள ஆசாரிப்பள்ளம் வடிவீஸ்வரம் இடலாக்குடி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளர்களுக்கு மறு இணைப்பு மேளா 12 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், மேம்பாலங்கள், நீர்நிலைகரையோரம் உட்பட பொது இடங்களில் பலரும் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. மது போதையில் அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் பொது இடத்தில் மது அருந்துவோரை கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த 8 நாட்களில் மட்டும் பொது இடங்களில் மது குடித்ததாக மொத்தம் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.