India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10.ம் நாளான அக்.2.ல் பாரி வேட்டை நடக்கிறது. அன்று பகல் 12 மணியில் இருந்து அரசு மற்றும் பிறவாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கரசாலை வழியாக குமரி பஸ் நிலையம் செல்ல வேண்டும், நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் ரெயில் நிலைய சந்திப்பு வழி பஸ்நிலையம் செல்ல வேண்டும். இந்த மாற்றம் அன்றைய தினம் இரவு 8மணி வரை அமலில் இருக்கும்.

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <

குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். வாகனங்கள் செல்வதற்கும் நேர கட்டுப்பாடு உள்ளது. இன்று காலை தக்கலை அருகே கனிமவள லாரி ஒன்று சொகுசு கார் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று இரவு ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் பெங்களூரு, சென்னைக்கு செல்லும் 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் டிரைவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததால் இருவரையும் கீழிறக்கி மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்க அனுமதித்தனர். டிரைவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனர்.

குமரி மக்களே இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 – 36 வயதுகுட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <

வில்லுக்குறியை சேர்ந்தவர் பழனி. இவர் நேற்று இரவு தனது மனைவி கஸ்தூரி மற்றும் குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பழனிக்கும் மனைவி கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பழனி கத்தியால் கஸ்தூரியை குத்தினார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பத்மநாபபுரம் போக்குவரத்துப் போலீசார் நேற்று (செப்.28) சாமியார் மடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக ஸ்கூட்டர்களில் வந்த 2 சிறுவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இருவரும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள். ஒரு சிறுவனின் தந்தை வெளிநாட்டிலும், மற்றொருவரின் தந்தை சென்னையிலும் வேலையில் உள்ளதாக கூறினர். ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து, சிறுவர்களின் தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குமரி மாவட்டத்தில் நடந்த குரூப் 2 தேர்வை 13 ஆயிரத்து 225 எழுத நுழைவு சீட்டுகள் வழங் கப்பட்டிருந்தது. 9982 பேர் பங்கேற்று எழுதினர். 3243 பேர் தேர்வு எழுத வரவில்லை. நாகர்கோவில் பகுதிகளில் 2265 பேரும், விளவங்கோடு பகுதிக ளில் உள்ள மையங்களில் 978 பேரும் தேர்வு எழுத வருகை தரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நாகர்கோவில் அருகே மதுவிலக்கு ஆய்வாளர் ஜானகி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்தன அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 1.80 கிலோ கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் சிவகாசியை சேர்ந்த பால்பாண்டி என்பது லாரி ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

குமரி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.