Kanyakumari

News September 30, 2025

குமரி: புனலூர் ரயிலை நீட்டிக்க மனு

image

நாகர்கோவில் வழியாக செல்லும் புனலூர் மதுரை ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள் ஒரு நிமிடம் குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று குழித்துறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தமிழக அமைச்சரும் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான மனோ தங்கராஜ்டம் இன்று மனு அளிக்கப்பட்டது.

News September 30, 2025

குமரி: B.Eக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News September 30, 2025

குமரி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

image

குமரி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். குமரி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 30, 2025

குமரி: ஆவின் கார்டு RECHARGE பண்ணுமா??

image

குமரி மக்களே ஆவின் பால் வாங்குறீங்களா? உங்க ஆவின் பால் அட்டையை ரீசார்ஜ் பண்ண இனி அலைய வேண்டியதிலை.. உங்க வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ரீசார்ஜ் பண்ணலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து அட்டையின் எண் குறிப்பிட்டு UPI அல்லது கார்டு மூலம் ரீசார்ஜ் பண்ணுங்க.மேலும் தகவல்களுக்கு: 18004253300. (சூப்பர் தகவல்: இதுல நீங்க புது கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம்) இந்த தகவலை ஆவின் பால் வாங்குறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 30, 2025

குமரி: பயிர்களை நாசம் செய்யும் காட்டுவிலங்குகள்

image

குமரி, ஆரல்வாய்மொழி பொய்கை மலைப்பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது வேரில் பிஞ்சு பிடிக்கும் நிலையில் காட்டுப் பன்றிகள் அங்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 30, 2025

குமரி: இறைச்சி விற்பனைக்கு புது RULES!

image

குமரி மாவட்டத்தில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனையை தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வியாபாரிகளைச சந்தித்து எச்சரிப்பது, அபராதம் விதிப்பது மற்றும் சுகாதாரமற்ற கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரமற்ற விற்பனை செய்யும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் அறிவித்துள்ளார்.

News September 30, 2025

இன்று இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (செப்டம்பர் 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் SSI, HC அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து காவல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு 04652-220417 என்ற கட்டுப்பாட்டு அறை எண் அல்லது ரோந்து அதிகாரிகளின் கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News September 29, 2025

குமரி: மனைவி கொலை; கணவர் மருத்துவமனையில் அனுமதி

image

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் நேற்று மனைவி கஸ்தூரியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அப்போது பழனி நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பழனிக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News September 29, 2025

குமரி: தீக்குளித்த மனைவி பலி., கணவர் படுகாயம்

image

ஏழு சாட்டுபற்று பகுதியை சேர்ந்த தம்பதியினர் சுந்தர்-ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அவரது கணவர் சுந்தர் அவரைக் காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் படு காயம் அடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி நேற்று உயிரிழந்தார். தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 29, 2025

குமரியில் அக்.2-ல் போக்குவரத்து மாற்றம்

image

குமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10.ம் நாளான அக்.2.ல் பாரி வேட்டை நடக்கிறது. அன்று பகல் 12 மணியில் இருந்து அரசு மற்றும் பிறவாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கரசாலை வழியாக குமரி பஸ் நிலையம் செல்ல வேண்டும், நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் ரெயில் நிலைய சந்திப்பு வழி பஸ்நிலையம் செல்ல வேண்டும். இந்த மாற்றம் அன்றைய தினம் இரவு 8மணி வரை அமலில் இருக்கும். 

error: Content is protected !!