India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 12 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை அலைகள் கரைப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இன்று(மார்ச் 19) மாலை 3.30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கடல் சார் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது. ஆகவே கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
#இன்று(மார்ச் 19) காலை 8.30 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககேட்டு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவட்டார் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம்.#காலை 9 மணிக்கு முகிலன் கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் வழக்கு மீனா தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.#இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் 4ஆம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது.
இந்தி கற்றதாகக் கூறப்படும் சுந்தர் பிச்சை இன்று இந்திக்காரர்களுடன் வேலை பார்க்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்களுடன் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றுகிறார். அது இந்தி கற்றதால் அல்ல, ஆங்கிலம் கற்றுக்கொண்டதால். ஒரு வேளை அன்று பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று Google Alphabet நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியில் வேறொருவர் அமர்ந்திருப்பார் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எந்த ஒரு புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் சரியான அளவில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.
குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS
கன்னியாகுமரி – மும்பை CST சிறப்பு ரயில்(எண் 01006) இன்று(மார்ச் 18) பிற்பகல 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டியிருந்தது. இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தால் 2 மணி 30 நிமிடம் தாமதம், மாலை 16.45 மணிக்கு CST சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
குமரி – கேரள எல்லை பகுதியான பழுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள – தமிழக போலீசார் விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நிதி நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கை கேரள அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 18) 28.49 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.20 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 60 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 28 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். குமரி மாவட்டத்தில் 1.22 லட்சம் பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 51% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.