India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி மண்டபம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது. மண்டபத்தின் மையக் கூண்டு காந்தியின் வயதை குறிப்பிடும் வகையில் 79 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது. ஆண்தோறும் காந்தியின் பிறந்த நாளான அக்.2ம்தேதி 12 மணிக்கு சூரிய கதிர்கள் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது. நாளை இந்த அபூர்வ காட்சியை காணலாம்.

குமரி மக்களே; இந்திய ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <

நாகர்கோவிலில் இருந்து குஜராத் செல்லும் காந்தி தாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டு சென்ற நிலையில் பள்ளியாடி ரயில் நிலையத்தை ரயில் கடக்கும்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

திப்ருகர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி செல்லாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 31ம் தேதி வரை இந்த ரயில் கன்னியாகுமரி செல்லாது. நாகர்கோவில் கன்னியாகுமரி இடையே பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குமரி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் என்று குமரி அஞ்சல் கண்காணிப்பாளர் இன்று கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FLZ, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (செப் 30 ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளையும் நாளை மறு தினமும் பூஜை விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பூஜை விழாக்கள் நடைபெறுகிறது.இதனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடைவீதிகளிலும் விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 1000 போலீசார் மாவட்டம் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள் இதற்கான ஏற்பாடுகளை எஸ். பி. ஸ்டாலின் செய்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி (02.10.2025) வியாழக்கிழமை அன்று ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வதை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் விலங்குகளை வதை செய்யவோ, இறைச்சி விற்பனை செய்யவோ கூடாது என நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழையும் மிதமான மழையும் பெய்தது. மழையைத் தொடர்ந்து மாவட்டத்தில் முக்கிய விவசாய பயிர்களில் ஒன்றான ரப்பர் பால் வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன. வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் ரப்பர் பால் உற்பத்தி குறைவது வழக்கம். கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று ரப்பர் விவசாயிகள் நேற்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.