Kanyakumari

News October 2, 2025

வெற்றிப் பாதை பயிற்சி வகுப்புகள் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

image

இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதையை விட்டு சரியான பாதையை வழிகாட்டும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னெடுப்பாக வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து (அக் 5) நடைபெற உள்ளது. இந்த பயிற்சி தேர்வு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 2, 2025

குமரி: தலை நசுங்கி ஓட்டுநர் பலி

image

திங்கள்நகரிலிருந்து கருங்கல் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில், போர்வேல் தோண்டும் வாகன ஓட்டுனர் ரமேஷ் (46) என்பவர் இரவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு ஓரத்தில் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தர். நள்ளிரவில் பம்பின் உள்ளே வந்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மீது ஏறி இறங்கியதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரணியல் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

 

News October 2, 2025

குமரி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இப்பயனுள்ள தகலவை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 2, 2025

குமரி: லாரி மோதி பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு

image

சரல்விளையை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ் (41 ) ,குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கல்லுக்கட்டி பகுதியில் வைத்து கனிம வள லாரி மோதில் படுகாயம் அடைந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று 1-ம் தேதி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

News October 2, 2025

குமரி: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

image

திருவட்டார் போலீஸ் சரகம் திருவரம்பு இடத்தைச் சேர்ந்தவர் டெய்சி (62) இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வந்தார். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். அவர் விஷம் குடித்து இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 2, 2025

குமரி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 2, 2025

குமரி: மனைவி கொலை – கணவன் பரபரப்பு வாக்குமூலம்

image

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் அவரது மனைவி கஸ்தூரியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அவரை இரணியல் போலீசார் கைது செய்தனர். அப்போது பழனி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் எனது மனைவி நான் சொல்வதைக் கேட்கவில்லை. அதனால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News October 1, 2025

குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

குமரி: இன்ஸ்டா காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

image

மாங்கோடு பகுதி பொறியியல் கல்லூரி மாணவி அபியா(20) திருவனந்தபுரம் காட்டாக்கடை லாரி டிரைவர் விபின்(21) இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். கடந்த செப்.27.ல் அபியா காணாமால் போன நிலையில் அருமனை போலீசார் அபியாவை தேடிவந்தனர். நேற்று அபியா, விபினுடன் அருமனை போலீசில் தஞ்சமடைந்து, நெய்யாற்றின் கரை கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக கூறினார்.

error: Content is protected !!