India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் இருந்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் I.T.I முடித்தவர்கள் ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாதம்தோறும் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். தேவைப்படுவோர் ஏப்ரல் 4ஆம் தேதி குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. SHARE IT.
சரலபள்ளி – கன்னியாகுமரி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நலகொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர், குடுர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. SHARE IT.
#இன்று(மார்ச் 19) காலை 8:30 மணிக்கு சட்டவிரோத சம்பள வெட்டு முறையை கைவிட வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கிள்ளியூர் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு விவேகானந்தர் படகு குழாம் நீடிப்பு செய்வது குறித்து மீன்துறை உதவி இயக்குநர் வாவா துறை மீனவ கிராம நிர்வாக கமிட்டியினருடன் சின்ன முட்டம் மீன்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்த தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார், பாஜக வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ராணி, பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று(மார்ச் 19) கடை விற்பனையாளர் நாராயணன் கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வெறி நாய்களை கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெட்டா சோதனை சாவடி வழியாக தமிழ்நாடு எல்லை பகுதியான அரகநாடு கட்டச்சல் பகுதியில் விட்டபோது வாகனத்தை பொதுமக்கள் விரட்டி சென்று சிறைபிடித்தனர். ஒரு சில நாய்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் அஞ்சல் துறை மூலம் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர் முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் இந்த அடையாள அட்டையை பெற முடியும். இதற்கான விண்ணப்பத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று குமரி அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அயயா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள நாடார் சமூக மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வைகுண்ட சாமி தர்மபரிபாலன அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் கேரள முதலமைச்சரை சந்தித்தபோது இதை அவர் கூறியதாக தகவல்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 19) 28.55அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.10 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 50 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து மார்ச் 22 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெறும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இளைஞர் இதில் பங்கேற்று பயன்பெறலாம். நண்பர்களுக்கு share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.