Kanyakumari

News January 3, 2026

குமரியில் நிமிர் திட்டம் – 19.5 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

image

குமரி எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரியில் நிமிர் திட்டத்தின் கீழ் மொத்த விழிப்புணர்வு கூட்டம் 7105 நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் காவல் உதவி செயலியை 60486 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 19.5 லட்சம் மக்களை சந்தித்து நிமிர் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், நிமிர் திட்டத்தின் மூலம் நான்கு சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News January 3, 2026

குமரி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

குமரி மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 3, 2026

குமரி வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

குமரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

குமரி: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்..

image

பொங்கல் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,11 (ம) 18-ஆம் தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து ஜன.,12 மற்றும் 19-ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13, 20 தேதிகளிலும், தாம்பரத்திலிருந்து குமரிக்கு ஜன.,14, 21 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

News January 3, 2026

குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

image

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News January 3, 2026

குமரி: ஆன்லைன் பண மோசடியால் வங்கி கணக்குகள் முடக்கம்..

image

குமரியில் பண மோசடி தொடர்பாக 2,89,83,656 ரூபாய் மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. அதில் 1,53,29,516 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமரி காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 3, 2026

குமரி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை ரெடி!

image

குமரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

குமரி: குளத்தில் மிதந்த ஆண் சடலம்…

image

காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்த நிலையில் நேற்று (ஜன.2) அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2026

குமரி: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விபரீத முடிவு!

image

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் மன வேதனையில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் நேற்று (ஜன.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2026

குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

image

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!