India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளையை சேர்ந்த தம்பதி ஜெறின் (41) – உஷா (32). இவர்களுக்கு ஒரு மகனும் (6), ஒரு மகளும் (5) உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஜெறின் அருகில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்று, பின்னர் ஜெறின் திரும்ப வந்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து ஜெறின் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும் (ஜன.3), நாளையும்
(ஜன.4) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான இறுதி வாய்ப்பு இதுவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர் SIR லிஸ்டில் வராதோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். SHARE

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (ரயில் எண் 07229) ஜனவரி 02, 09, 23 மற்றும் 30 அன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பி விடப்படும். மதுரை, கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

குமரி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12-வது படித்தவர்கள் இங்கு <

குமரி ரட்சகா் தெருவை சோ்ந்தவா் அரிஷ் (23). வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்த நிலையில் தனது டூவீலரில் கொட்டாரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ அரிஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து குமரி போலீசார் விசாரணை.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டு 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை நேற்று (ஜன.1) தெரிவித்துள்ளது.

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.